என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை
Byமாலை மலர்14 March 2017 9:30 AM GMT (Updated: 14 March 2017 9:30 AM GMT)
போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து சேலம் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
சேலம்:
சேலம் போக்குவரத்து பிரிவில் போலீஸ் ஏட்டுவாக இருந்த ராஜ் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந்தேதி கடத்தி படுகொலை செய்யப்பட்டார்.
சீலநாயக்கன்பட்டிக்கும் கொண்டலாம்பட்டிக்கும் இடையே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் உள்ள சந்தில் 7 பேர் கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமார், முருகன், பாலன் என்ற பாலகிருஷ்ணன், சாத்தான் எனற ராஜா, பிரபு, வீரமணி, பன்னீர் செல்வம் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சேலம் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரன் இன்று காலை தீர்ப்பு கூறினார். குற்றவாளிகள் 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
சேலம் போக்குவரத்து பிரிவில் போலீஸ் ஏட்டுவாக இருந்த ராஜ் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந்தேதி கடத்தி படுகொலை செய்யப்பட்டார்.
சீலநாயக்கன்பட்டிக்கும் கொண்டலாம்பட்டிக்கும் இடையே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் உள்ள சந்தில் 7 பேர் கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமார், முருகன், பாலன் என்ற பாலகிருஷ்ணன், சாத்தான் எனற ராஜா, பிரபு, வீரமணி, பன்னீர் செல்வம் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சேலம் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரன் இன்று காலை தீர்ப்பு கூறினார். குற்றவாளிகள் 7 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X