என் மலர்
செய்திகள்

போராட்டத்தில் கருப்பு கொடியுடன் கலந்துகொண்ட குழந்தைகள்
வடகாடு போராட்டத்தில் கருப்பு கொடியுடன் பங்கேற்ற குழந்தைகள்
வடகாட்டில் இன்று 9-வது நாளாக தொடரும் போராட்டத்தில் கருப்பு கொடியுடன் குழந்தைகள் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து 9-வது நாளாக இன்று நடந்த போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் சுந்தரிகொல்லை, வடகுபட்டி, காமராஜர்புரம், குலமங்கலம், கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 வய திற்குட்பட்ட குழந்தைகள் பலர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பாதிப்புகள் பற்றிய பதாகைகளை கையில் ஏந்தியபடி வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
சென்னையில் இருந்து வந்துள்ள கல்லூரி மாணவர்கள் 10 பேர், போராட்டத்தில் தொடர்ந்து தங்கியிருந்து பங்கேற்று வருவதோடு, இன்று காலை அப்பகுதியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட னர். போராட்டத்தில் பங்கேற்று பேசிய மாணவர்கள், சீமை கருவேல மரங்களாலும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். எனவே அதனை அகற்ற வேண்டும் என்றனர்.
நேற்று நடந்த போராட்டத்தில் அப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் ஓடுகளை கையால் உடைப்பது, தீப்பந்தம் சுற்றுவது மற்றும் சிலம்பாட்டம் ஆடி தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து 9-வது நாளாக இன்று நடந்த போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் சுந்தரிகொல்லை, வடகுபட்டி, காமராஜர்புரம், குலமங்கலம், கொத்தமங்கலம், கீரமங்கலம், வடகாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 வய திற்குட்பட்ட குழந்தைகள் பலர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பாதிப்புகள் பற்றிய பதாகைகளை கையில் ஏந்தியபடி வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
சென்னையில் இருந்து வந்துள்ள கல்லூரி மாணவர்கள் 10 பேர், போராட்டத்தில் தொடர்ந்து தங்கியிருந்து பங்கேற்று வருவதோடு, இன்று காலை அப்பகுதியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட னர். போராட்டத்தில் பங்கேற்று பேசிய மாணவர்கள், சீமை கருவேல மரங்களாலும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். எனவே அதனை அகற்ற வேண்டும் என்றனர்.
நேற்று நடந்த போராட்டத்தில் அப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகள் ஓடுகளை கையால் உடைப்பது, தீப்பந்தம் சுற்றுவது மற்றும் சிலம்பாட்டம் ஆடி தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர்.
Next Story






