என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக பொன்னையா பொறுப்பு ஏற்பு
    X

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக பொன்னையா பொறுப்பு ஏற்பு

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக பா.பொன்னையா இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக பா.பொன்னையா இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

    அவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் காரியா பட்டி அருகே உள்ள சித்தனேந்தல் கிராமம் ஆகும்.

    கலெக்டர் பா.பொன்னையாவுக்கு மாவட்ட வருவாய் துறை அதிகாரி க.சவுரிராஜன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட பொதுப்பணித்துறை உயர் அதிகாரி இரா.முத்தையா, காஞ்சீபுரம் சப்-கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சங்கீதா, மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை நிர்வாக இயக்குனரும், கூட்டுறவு இணைப்பதிவாளருமான பாபு, காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் சர்தார் உள்பட உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து கலெக்டர் பொன்னையா அனைத்து துறை அலுவகத்திற்கும் சென்று பார்வையிட்டார்.

    முன்னதாக பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயிலுக்கு சென்று காமாட்சி அம்பாளை கலெக்டர் பொன்னையா தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் பொன்னாடை அணிவித்து குங்கும பிரசாதங்கள் அளித்தனர்.
    Next Story
    ×