என் மலர்
செய்திகள்

பவானி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: 2 பேர் பலி
தொட்டிபாளையம் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பவானி:
வெள்ளோடு அருகே உள்ள புங்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது42). தேங்காய் வியாபாரி. ஈரோடு திண்டல் புதுக்காலனியை சேர்ந்தவர் செல்வராஜ்(40). சாயப்பட்டறை தொழிலாளி.
சாமிநாதன் சித்தோடு சென்று விட்டு சம்பவத்தன்று மாலை வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
இதே போன்று செல்வராஜ் நசியனூரில் இருந்து சித்தோடுக்கு தனது மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். தொட்டிபாளையம் அருகே வந்த போது 2 பேர் வந்த மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் மோதியது.
இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் செல்வராஜ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சாமிநாதன் உயிருக்காக போராடி கொண்டு இருந்தார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சாமிநாதனை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மேலும் செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சாமிநாதனும் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வெள்ளோடு அருகே உள்ள புங்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது42). தேங்காய் வியாபாரி. ஈரோடு திண்டல் புதுக்காலனியை சேர்ந்தவர் செல்வராஜ்(40). சாயப்பட்டறை தொழிலாளி.
சாமிநாதன் சித்தோடு சென்று விட்டு சம்பவத்தன்று மாலை வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
இதே போன்று செல்வராஜ் நசியனூரில் இருந்து சித்தோடுக்கு தனது மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். தொட்டிபாளையம் அருகே வந்த போது 2 பேர் வந்த மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் மோதியது.
இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் செல்வராஜ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சாமிநாதன் உயிருக்காக போராடி கொண்டு இருந்தார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சாமிநாதனை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மேலும் செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சாமிநாதனும் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






