என் மலர்
செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டம்: நெடுவாசலில் பெண்கள் ஓப்பாரி போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் விவசாயிகளையும், விவசாய நிலத்தையும் அழித்து விடாதீர்கள் என்று பெண்கள் கண்ணீர் விட்டு தலைவிரி கோலத்துடன் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிரான போராட்டம் நெடுவாசல் கிராமத்தில் இன்று 19-வது நாளை எட்டியுள்ளது.
வீடுகளில் கருப்பு கொடி கட்டுதல், வீட்டின் முன்பு அகல் விளக்கு ஏற்றுதல், ஆர்ப்பாட்டம் என போராட்டத்தில் புதிய யுக்திகளை நெடுவாசல் கிராம மக்கள் கையாண்டு வருகிறார்கள்.
நேற்று முன்தினம் கும்மியடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்த கிராம மக்கள் இன்று ஒப்பாரி வைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தினர்.
இதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் தலைவிரி கோலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் விவசாயிகளையும், விவசாய நிலத்தையும் அழித்து விடாதீர்கள் என்று கண்ணீர் விட்டு கதறி ஒப்பாரி வைத்தனர்.
இதனால் அந்த பகுதி முழுவதும் மரண ஓலம் கேட்டதுபோல் தென்பட்டது. இன்றைய போராட்டத்தில் காலையில் குறைந்த அளவிலான நபர்களே இருந்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் கூடியது.
மதியம் சுமார் 1 மணியளவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்ட பந்தலில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு தேவையான மதிய உணவு தயாரானது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிரான போராட்டம் நெடுவாசல் கிராமத்தில் இன்று 19-வது நாளை எட்டியுள்ளது.
வீடுகளில் கருப்பு கொடி கட்டுதல், வீட்டின் முன்பு அகல் விளக்கு ஏற்றுதல், ஆர்ப்பாட்டம் என போராட்டத்தில் புதிய யுக்திகளை நெடுவாசல் கிராம மக்கள் கையாண்டு வருகிறார்கள்.
நேற்று முன்தினம் கும்மியடித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்த கிராம மக்கள் இன்று ஒப்பாரி வைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தினர்.
இதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் தலைவிரி கோலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் விவசாயிகளையும், விவசாய நிலத்தையும் அழித்து விடாதீர்கள் என்று கண்ணீர் விட்டு கதறி ஒப்பாரி வைத்தனர்.
இதனால் அந்த பகுதி முழுவதும் மரண ஓலம் கேட்டதுபோல் தென்பட்டது. இன்றைய போராட்டத்தில் காலையில் குறைந்த அளவிலான நபர்களே இருந்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் கூடியது.
மதியம் சுமார் 1 மணியளவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்ட பந்தலில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு தேவையான மதிய உணவு தயாரானது.
Next Story






