என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாயு கசிவு ஏற்பட்ட மீத்தேன் திட்ட சோதனை குழாய் முன்பு போலீஸ் குவிப்பு
    X

    வாயு கசிவு ஏற்பட்ட மீத்தேன் திட்ட சோதனை குழாய் முன்பு போலீஸ் குவிப்பு

    அரியலூர் அருகே விழப்பள்ளம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த மீத்தேன் திட்ட சோதனைக்குழாயில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக ஆழ்துளை சோதனை குழாய் அருகே போலீசார் குவிக்கப்பட்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் பூமிக்கடியில் பெட்ரோல் இருக்கிறதா? என ஆய்வு செய்வதற்காக விவசாயிகளின் நிலங்களை பல ஆண்டுகளுக்கு முன்பு குத்தகை பேசி, கையகப்படுத்தி ஆழ்துளை கிணறு அமைத்தனர்.

    அதன் மூலம் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க இருந்தது விவசாயிகளுக்கு தெரிய வந்தது. இத்திட்டத்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் விழப்பள்ளம் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த மீத்தேன் திட்ட சோதனைக்குழாயில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் வாயு கசிவை சரி செய்தனர்.

    இதனிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை நெடுவாசலில் பொதுமக்கள் நடத்தி வரும் நிலையில், வாயு கசிவு ஏற்பட்டதின் காரணமாக ஜெயங்கொண்டம் பகுதியில் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்களோ? என போலீசார் எண்ணினர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக விழப்பள்ளத்தில் உள்ள ஆழ்துளை சோதனை குழாய் அருகே ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
    Next Story
    ×