என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுவாசல் போராட்டக்களத்தை சீரமைத்த இளைஞர்கள்
    X

    நெடுவாசல் போராட்டக்களத்தை சீரமைத்த இளைஞர்கள்

    நெடுவாசல் போராட்டக்களத்தில் நேற்று பெய்த மழையினால் அப்பகுதியில் தண்ணீர் தேங்கியது. இதனிடையே போராட்டத்தை தொடர்வதற்கான வசதிகளை இளைஞர்கள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

    நெடுவாசல் போராட்டக்களத்தில் பந்தல் எதுவும் அமைக்காமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பெய்த மழையினால் அப்பகுதியின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள், இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே போராட்டக்கள் பகுதியில் தேங்கி கிடந்த தண்ணீரை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அகற்றினர். மேலும் பொதுமக்கள் அமர்வதற்கு வசதியாக தரையில் மணலை குவித்தனர். மேலும் பொதுமக்கள் அமரக்கூடிய இடத்தில் பந்தல் மற்றும் தகர கொட்டகை அமைத்தனர். சமையல் செய்யும் பகுதியிலும் தகர கொட்டகை அமைக்கப்பட்டது. பலத்த மழை பெய்தாலும் போராட்டத்தை தொடர்வதற்கான வசதிகளை இளைஞர்கள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
    Next Story
    ×