என் மலர்
செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரே மாதத்தில் 36 சாயப்பட்டறைகள் மூடப்பட்டன
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் தோல் மற்றும் சாய தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதாகவும் இதனால் விவசாய நிலங்கள்- ஆழ் குழாய் கிணறுகள், மற்றும் குடிநீர் மாசு படுவதாகவும் புகார் கூறப்பட்டது.
இதை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் போல் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதன்படி கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் தோல்- சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அனுமதி இல்லாமல் செயல்பட்ட சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டன.
இந்த நிலையில் மாசு கட்டுப்பாடு விதிகளை மீறி செயல்பட்டதாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 36-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மூடப்பட்டு உள்ளன.
இது பற்றி மாசு கட்டுப் பாடு அதிகாரிகள் கூறும் போது ‘‘கழிவு நீரை சுத்திகாக்காமல் வெளியேற்றும் தோல்-சாயப்பட்டறைகள் குறித்து கண்காணித்து வருகிறோம். மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு மாறாக தோல் மற்றும் சாயப்பட்டறைகள் செயல்பட்டால் அந்த தொழிற்சாலைகள் மீது பார பட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினர்.






