என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை
    X

    நாகை மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

    இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக சிறை பிடித்தனர். அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சந்தோஷ், சதிஷ், சரத், ஆறுமுகம் உள்ளிட்ட 8 பேர் மீன் பிடிக்க சென்றனர். நேற்று இரவு அவர்கள் கோடியக்கரைக்கு தென் கிழக்கே இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் 8 பேரையும் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக சிறை பிடித்தனர். அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர்.

    அவர்கள் இலங்கை திரிகோணமலை அழைத்து செல்லப்பட்டனர். அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 8 மீனவர்களும் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நாகை மீனவர்கள்சிறை பிடிக்கப்பட்டனர். தற்போது மேலும் 8 பேர் சிறை பிடிக்கப்பட்டது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனை கண்டிக்கும் வகையில் நாகை தாலுகா மீனவர்கள் இன்று அல்லது நாளை கூட்டம் நடத்தி அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்க உள்ளதாக அக்கரைப்பேட்டை பஞ்சாயத்தார் தெரிவித்தனர்.

    மேலும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இலங்கை மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடித்து வருவதால் கோடியக்கரையில் தங்கி மீன் பிடித்த வெளிமாவட்ட மீனவர்கள் அங்கிருந்து வெறியேறி தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.
    Next Story
    ×