என் மலர்
செய்திகள்

உண்ணாவிரதத்தில் தீபா ஆதரவாளர்களும் பங்கேற்க வேண்டும்: சத்தியபாமா எம்.பி. வேண்டுகோள்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி ஈரோட்டில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தீபா ஆதரவாளர்களும் பங்கேற்க வேண்டும் என சத்தியபாமா எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு எஸ்.பி. அலுவலத்திற்கு திருப்பூர் எம்.பி. சத்தியபாமா தலைமையில் நிர்வாகிகள் வந்து எஸ்.பி. சிவக்குமாரிடம் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோடு கானை மாட்டு சிலை அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.
மனு கொடுத்து விட்டு வெளியே வந்த எம்.பி. சத்தியபாமா நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பன்னீர் செல்வம் அணியினர் கோரிக்கை வைத்தனர். இதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வரும் 8-ந்தேதி (புதன்கிழமை) உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற உள்ளது.
ஈரோட்டில் வரும் 8-ந் தேதி காளைமாட்டு சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி கேட்க இன்று ஈரோடு எஸ்.பி.சிவக்குமாரை சந்தித்து அனுமதி கேட்டோம்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தீபா ஆதரவாளர்களும் கலந்து கொள்ள வேண்டும். உண்ணாவிரதத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது முன்னாள் எம்.பி. கோவிந்தராஜர். முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்.ரமணிதரன், கிட்டுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஈரோடு எஸ்.பி. அலுவலத்திற்கு திருப்பூர் எம்.பி. சத்தியபாமா தலைமையில் நிர்வாகிகள் வந்து எஸ்.பி. சிவக்குமாரிடம் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோடு கானை மாட்டு சிலை அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.
மனு கொடுத்து விட்டு வெளியே வந்த எம்.பி. சத்தியபாமா நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பன்னீர் செல்வம் அணியினர் கோரிக்கை வைத்தனர். இதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வரும் 8-ந்தேதி (புதன்கிழமை) உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற உள்ளது.
ஈரோட்டில் வரும் 8-ந் தேதி காளைமாட்டு சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி கேட்க இன்று ஈரோடு எஸ்.பி.சிவக்குமாரை சந்தித்து அனுமதி கேட்டோம்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தீபா ஆதரவாளர்களும் கலந்து கொள்ள வேண்டும். உண்ணாவிரதத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது முன்னாள் எம்.பி. கோவிந்தராஜர். முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்.ரமணிதரன், கிட்டுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story






