என் மலர்
செய்திகள்

காரைக்குடியில் தீபா ஆதரவாளர்கள் மீது தாக்குதல்: முன்னாள் கவுன்சிலர்கள் காயம்
தீபா ஆதரவாளர்கள் மீது அ.தி.மு.க.வினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் கவுன்சிலர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
காரைக்குடி:
முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் நேற்று அளித்த பேட்டியை தொடர்ந்து தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அவரது பேட்டியால் தீபா ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தீபா ஆதரவாளர்கள் இன்று 5 விலக்கு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் ஊரவயல் ராமு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அசோகன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். அவர்களுக்கும் தீபா ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தீபா ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலில் தீபா ஆதரவாளர்களான முன்னாள் கவுன்சிலர்கள் ரவி, அங்குராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் நேற்று அளித்த பேட்டியை தொடர்ந்து தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அவரது பேட்டியால் தீபா ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தீபா ஆதரவாளர்கள் இன்று 5 விலக்கு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் ஊரவயல் ராமு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அசோகன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். அவர்களுக்கும் தீபா ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தீபா ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலில் தீபா ஆதரவாளர்களான முன்னாள் கவுன்சிலர்கள் ரவி, அங்குராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






