என் மலர்
செய்திகள்

கடலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் நகை- பணம் கொள்ளை
கடலூர் அருகே கடை ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூரை அடுத்த கோண்டூர் முத்துநகரை சேர்ந்தவர் ஜாபர் (வயது 60). இவர் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள இரும்புக்கடையில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். நேற்று இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றனர்.
இதையடுத்து ஜாபர் வீட்டைபூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். இதைநோட்டமிட்ட மர்மமனிதர்கள் அங்கு வந்தனர். ஜாபர் வீட்டுக்கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
நள்ளிரவில் வீட்டுக்கு வந்த ஜாபர் தனது வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
கடை ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரை அடுத்த கோண்டூர் முத்துநகரை சேர்ந்தவர் ஜாபர் (வயது 60). இவர் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள இரும்புக்கடையில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். நேற்று இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றனர்.
இதையடுத்து ஜாபர் வீட்டைபூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். இதைநோட்டமிட்ட மர்மமனிதர்கள் அங்கு வந்தனர். ஜாபர் வீட்டுக்கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
நள்ளிரவில் வீட்டுக்கு வந்த ஜாபர் தனது வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
கடை ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






