என் மலர்
செய்திகள்

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர சபதம் ஏற்போம்: தீபா பேரவை கூட்டத்தில் தீர்மானம்
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர சபதம் ஏற்போம்: தீபா பேரவை கூட்டத்தில் தீர்மானம் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர சபதம் ஏற்போம் என ஈரோட்டில் நடந்த தீபா பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு:
ஜெ.தீபா பேரவையின் ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று ஈரோட்டில் நடந்தது.
கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூக்கடை சரவணக்குமார் தலைமை தாங்கி பேசினார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டி.தங்கமணி, மேற்கு சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் திருத்தணி முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஜெ.தீபாவின் லட்சியத்தை நிறைவேற்றும் வண்ணம் அவருடைய சூறாவளி சுற்றுப்பயணம் தொடங்கி ஈரோடு மாவட்டத்துக்கு வரும்போது லட்சக்கணக்கில் திரண்டு உற்சாகமாக வரவேற்பு அளிக்க வேண்டும். ஜெ.தீபா பேரவையில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களை சேர்க்க அனைவரும் தீவிரமாக பணியாற்றவேண்டும்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டதை வெற்றிக்களம் ஆக்கிய மாணவ -மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் ஜெ.தீபா பேரவை ஈரோடு மாவட்டத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மறைந்த முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நடந்த உண்மைகளையும், மரணத்தில் உள்ள மர்மங்களையும் வெளிக்கொண்டு வர சபதம் ஏற்போம் இருண்டு கிடக்கும் தமிழகத்தை தீபா தலைமையில் ஒளியேற்றுவோம் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜெ.தீபா பேரவையின் ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று ஈரோட்டில் நடந்தது.
கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூக்கடை சரவணக்குமார் தலைமை தாங்கி பேசினார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டி.தங்கமணி, மேற்கு சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் திருத்தணி முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஜெ.தீபாவின் லட்சியத்தை நிறைவேற்றும் வண்ணம் அவருடைய சூறாவளி சுற்றுப்பயணம் தொடங்கி ஈரோடு மாவட்டத்துக்கு வரும்போது லட்சக்கணக்கில் திரண்டு உற்சாகமாக வரவேற்பு அளிக்க வேண்டும். ஜெ.தீபா பேரவையில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களை சேர்க்க அனைவரும் தீவிரமாக பணியாற்றவேண்டும்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டதை வெற்றிக்களம் ஆக்கிய மாணவ -மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் ஜெ.தீபா பேரவை ஈரோடு மாவட்டத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மறைந்த முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நடந்த உண்மைகளையும், மரணத்தில் உள்ள மர்மங்களையும் வெளிக்கொண்டு வர சபதம் ஏற்போம் இருண்டு கிடக்கும் தமிழகத்தை தீபா தலைமையில் ஒளியேற்றுவோம் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story






