search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரோம்பேட்டையில் திருமண மண்டபத்தில் மணமகள் நகை கொள்ளை
    X

    குரோம்பேட்டையில் திருமண மண்டபத்தில் மணமகள் நகை கொள்ளை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குரோம்பேட்டையில் திருமண மண்டபத்தில் மணமகளின் நகை 35 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தாம்பரம்:

    சேலையூர் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் அனிதா. சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கும் மடிப்பாக்கத்தை சேர்ந்த என்ஜினீயர் அரவிந்தனுக்கும் இன்று குரோம்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து இருந்தனர்.

    நேற்று இரவு மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு மணமகளின் அறைக்கு உறவினர் ஒருவர் சென்று பார்த்த போது நகை வைத்து இருந்த சூட்கேஸ் உடைந்து கிடந்தது.

    அதில் இருந்த 35 பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர்கள் மணமகள் நகையை சுருட்டிச் சென்று இருப்பது தெரிந்தது. இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து குரோம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே இன்று காலை மணமகள் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.
    Next Story
    ×