என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈஞ்சம்பாக்கத்தில் வியாபாரி வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்30 Jan 2017 3:30 AM GMT (Updated: 30 Jan 2017 3:30 AM GMT)
ஈஞ்சம்பாக்கத்தில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 90 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் சோழமண்டல தேவி நகர், 6-வது தெருவைச் சேர்ந்தவர் அன்சாரி (வயது 50). இவர், சென்னை மயிலாப்பூரில் ‘பேன்சி’ கடை நடத்தி வருகிறார். இவருடைய மைத்துனருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதனால் அன்சாரி, நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் கீழே சிதறிக்கிடந்தன. பீரோவில் சோதனை செய்தபோது அதில் வைத்து இருந்த 90 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
இது குறித்த புகாரின் பேரில் நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோல் ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பழனி (40) என்பவர் வீட்டின் பின்பக்க வழியாக உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், வீட்டில் இருந்த 2 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் பணத்தை திருடிச்சென்று விட்டனர். இது பற்றி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் சோழமண்டல தேவி நகர், 6-வது தெருவைச் சேர்ந்தவர் அன்சாரி (வயது 50). இவர், சென்னை மயிலாப்பூரில் ‘பேன்சி’ கடை நடத்தி வருகிறார். இவருடைய மைத்துனருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதனால் அன்சாரி, நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் கீழே சிதறிக்கிடந்தன. பீரோவில் சோதனை செய்தபோது அதில் வைத்து இருந்த 90 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
இது குறித்த புகாரின் பேரில் நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோல் ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பழனி (40) என்பவர் வீட்டின் பின்பக்க வழியாக உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், வீட்டில் இருந்த 2 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் பணத்தை திருடிச்சென்று விட்டனர். இது பற்றி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X