என் மலர்
செய்திகள்

குடிபோதையில் புதுமாப்பிள்ளை ரகளை: திருமணத்தை நிறுத்திய மணமகள்
சிதம்பரம் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குடிபோதையில் புதுமாப்பிள்ளை ரகளையில் ஈடுபட்டதால் மணப்பெண்ணே திருமணத்தை நிறுத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளையை சேர்ந்தவர் தர்மராஜன் (வயது 28). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும், சிதம்பரம் அருகே உள்ள மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
சிதம்பரம் வ.உ.சி. தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணப்பெண், அவரது உறவினர்கள் மற்றும் புதுமாப்பிள்ளை, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வரவேற்பு நிகழ்ச்சி இரவு 10.30 மணிக்கு முடிவடைந்தது. பின்னர் புதுமாப்பிள்ளை தனது நண்பர்களுக்கு திருமண மண்டபத்தில் மது விருந்து வைத்தார்.
நண்பர்களுடன் சேர்ந்து புதுமாப்பிள்ளையும் மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் அவர் நண்பர்களுடன் சென்று சமையல்காரர்களிடம் எனது நண்பர்கள் சாப்பிட உணவு இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் உணவு எதுவும் இல்லை என்று கூறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த புதுமாப்பிள்ளை எனது நண்பர்களுக்கே உணவு இல்லையா? என்று சமையல்காரர்களிடம் தகராறு செய்தார். அவருக்கும், சமையல்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த சமையல்காரர்கள் சமைக்க முடியாது என்று கூறி அங்கிருந்து வெளியேறப் போவதாக கூறினர். இதனால் மணப்பெண் வீட்டாருக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டது. நள்ளிரவு வரை தகராறு நீடித்தது.
மணமகனின் இந்த செயல் மணமகளுக்கு தெரிய வந்தது. அவர் ஆத்திரம் அடைந்தார். குடிகார மாப்பிள்ளையை திருமணம் செய்ய மாட்டேன் என்று பெற்றோரிடம் கூறினார். மற்றவர்கள் மணப்பெண்ணை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர் கேட்கவில்லை.
பின்னர் மணமகள் தனது பெற்றோர் மற்றும் தோழிகளுடன் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.
இது தொடர்பாக சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் புதுமாப்பிள்ளை புகார் செய்தார். நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கும், தனக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.
இதையொட்டி இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மணப்பெண்ணும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டார்.
மணப்பெண்ணிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் பேசினார். அப்போது மதுவுக்கு அடிமையானவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். தயவு செய்து என்னை வற்புறுத்தாதீர்கள் என்று மணமகள் கூறி கதறி அழுதார். இதைத் தொடர்ந்து திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். மாப்பிள்ளை வீட்டாரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மணப்பெண்ணே திருமணத்தை நிறுத்திய இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளையை சேர்ந்தவர் தர்மராஜன் (வயது 28). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும், சிதம்பரம் அருகே உள்ள மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
சிதம்பரம் வ.உ.சி. தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணப்பெண், அவரது உறவினர்கள் மற்றும் புதுமாப்பிள்ளை, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வரவேற்பு நிகழ்ச்சி இரவு 10.30 மணிக்கு முடிவடைந்தது. பின்னர் புதுமாப்பிள்ளை தனது நண்பர்களுக்கு திருமண மண்டபத்தில் மது விருந்து வைத்தார்.
நண்பர்களுடன் சேர்ந்து புதுமாப்பிள்ளையும் மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் அவர் நண்பர்களுடன் சென்று சமையல்காரர்களிடம் எனது நண்பர்கள் சாப்பிட உணவு இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் உணவு எதுவும் இல்லை என்று கூறினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த புதுமாப்பிள்ளை எனது நண்பர்களுக்கே உணவு இல்லையா? என்று சமையல்காரர்களிடம் தகராறு செய்தார். அவருக்கும், சமையல்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த சமையல்காரர்கள் சமைக்க முடியாது என்று கூறி அங்கிருந்து வெளியேறப் போவதாக கூறினர். இதனால் மணப்பெண் வீட்டாருக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டது. நள்ளிரவு வரை தகராறு நீடித்தது.
மணமகனின் இந்த செயல் மணமகளுக்கு தெரிய வந்தது. அவர் ஆத்திரம் அடைந்தார். குடிகார மாப்பிள்ளையை திருமணம் செய்ய மாட்டேன் என்று பெற்றோரிடம் கூறினார். மற்றவர்கள் மணப்பெண்ணை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர் கேட்கவில்லை.
பின்னர் மணமகள் தனது பெற்றோர் மற்றும் தோழிகளுடன் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.
இது தொடர்பாக சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் புதுமாப்பிள்ளை புகார் செய்தார். நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கும், தனக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.
இதையொட்டி இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மணப்பெண்ணும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டார்.
மணப்பெண்ணிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் பேசினார். அப்போது மதுவுக்கு அடிமையானவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். தயவு செய்து என்னை வற்புறுத்தாதீர்கள் என்று மணமகள் கூறி கதறி அழுதார். இதைத் தொடர்ந்து திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். மாப்பிள்ளை வீட்டாரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மணப்பெண்ணே திருமணத்தை நிறுத்திய இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






