என் மலர்
செய்திகள்

திருவள்ளூரில் உண்ணாவிரதம்: வெளிநாட்டு குளிர்பானங்களை கொட்டி பொதுமக்கள் போராட்டம்
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே மாணவர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளிநாட்டு குளிர்பானங்களை கீழே கொட்டி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தில் இன்று 3-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு ராட்டின கிணறு மேம்பாலம் அருகே சட்டக் கல்லூரி மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் அவர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் நேற்று மாலை துவங்கிய ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு வரை மாணவர்கள் போராட்டத்தில் டி.வி. சீரியல் நடிகை மகாலட்சுமி கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். இன்று காலையும் அவர் மாணவர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே மாணவர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் அவர்கள் இன்று முதல் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளனர்.
பீர்க்கன்கரணை பஸ் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள் சுமார் 300 பேர் போராட்டம் நடத்தினர். தாம்பரம் சானட்டோரியம் ஜி.எஸ்.டி. சாலை அருகே சாப்ட்வேர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு தாம்பரம் பூண்டி பஜார் பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலையூரை அடுத்த அகரம் தென்சாலை, சிட்லபாக்கம் ஆர்.பி.சாலை, முடிச்சூர் லட்சுமிபுரம், உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
பல்லாவரம் பஸ் நிலையத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரம் இருந்தனர். அனகாபுத்தூர் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொம்பரம்பேடுவில் இன்று காலை மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
பூந்தமல்லியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நகராட்சி அலுவலகத்தில் இருந்து பூந்தமல்லி கோர்ட்டு வரை ஊர்வலமாக சென்றனர். பூந்தமல்லி கோர்ட்டு அருகே இன்று 2-வது நாளாக கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வியாசர்பாடி, சாஸ்திரி நகரில் பாதிரியார் பாலச்சாமி தலைமையில் கிறிஸ்தவர்கள் 500-க்கும் மேற்பட் டோர் அம்பேத்கர் கல்லூரி வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர், காலடிபேட்டை, காந்தி சிலை அருகே கோக், பெப்சி குளிர்பானங்களை கீழே கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தாழங்குப்பம் மீனவர் கிராமத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகரில் பொதுமக்கள் மற்றும் சென்னை பசுமை இயக்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
காஞ்சீபுரத்தில் இன்று 3-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு ராட்டின கிணறு மேம்பாலம் அருகே சட்டக் கல்லூரி மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றும் அவர்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் நேற்று மாலை துவங்கிய ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு வரை மாணவர்கள் போராட்டத்தில் டி.வி. சீரியல் நடிகை மகாலட்சுமி கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். இன்று காலையும் அவர் மாணவர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே மாணவர்கள் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் அவர்கள் இன்று முதல் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளனர்.
பீர்க்கன்கரணை பஸ் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள் சுமார் 300 பேர் போராட்டம் நடத்தினர். தாம்பரம் சானட்டோரியம் ஜி.எஸ்.டி. சாலை அருகே சாப்ட்வேர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு தாம்பரம் பூண்டி பஜார் பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலையூரை அடுத்த அகரம் தென்சாலை, சிட்லபாக்கம் ஆர்.பி.சாலை, முடிச்சூர் லட்சுமிபுரம், உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
பல்லாவரம் பஸ் நிலையத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரம் இருந்தனர். அனகாபுத்தூர் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொம்பரம்பேடுவில் இன்று காலை மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
பூந்தமல்லியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நகராட்சி அலுவலகத்தில் இருந்து பூந்தமல்லி கோர்ட்டு வரை ஊர்வலமாக சென்றனர். பூந்தமல்லி கோர்ட்டு அருகே இன்று 2-வது நாளாக கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வியாசர்பாடி, சாஸ்திரி நகரில் பாதிரியார் பாலச்சாமி தலைமையில் கிறிஸ்தவர்கள் 500-க்கும் மேற்பட் டோர் அம்பேத்கர் கல்லூரி வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர், காலடிபேட்டை, காந்தி சிலை அருகே கோக், பெப்சி குளிர்பானங்களை கீழே கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தாழங்குப்பம் மீனவர் கிராமத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகரில் பொதுமக்கள் மற்றும் சென்னை பசுமை இயக்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
Next Story






