என் மலர்
செய்திகள்

வண்டலூர் பூங்கா மூடப்பட்டதால் பொது மக்கள் ஏமாற்றம்
காணும் பொங்கலையொட்டி இன்று வண்டலூர் பூங்கா மூடப்பட்டதால் பொது மக்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் வண்டலூர் பூங்கா பகுதி உற்சாகம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தாம்பரம்:
காணும் பொங்கலையொட்டி வண்டலூர் பூங்காவில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பொது மக்கள் கூடுவது வழக்கம்.
குடும்பத்துடன் வரும் அவர்கள் நாள் முழுவதும் பூங்காவில் உற்சாகமாக பொழுதை கழித்து செல்வார்கள்.
கடந்த மாதம் வீசிய ‘வார்தா’ புயலின் போது வண்டலூர் பூங்காவில் இருந்த லட்சக்கணக்கான மரங்கள் சரிந்தன. சேதம் அடைந்த மரங்கள், விலங்குகளின் கூண்டுகள் இன்னும் சீரமைக்கப்படாததால் பூங்கா மூடியே கிடக்கிறது.
காணும் பொங்கலையொட்டி பூங்கா திறக்கப்படும் என்று பொது மக்கள் எதிர் பார்த்து இருந்தனர். ஆனால் மரக்கழிவுகள் முழுமையாக அகற்றப்படாததால் பூங்கா திறக்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் அறிவித்தனர். இது தொடர்பான அறிவிப்பு பலகை பூங்கா வாசல் முன்பு வைக்கப்பட்டு உள்ளது.
இதனால் காணும் பொங்கலுக்கு வண்டலூர் பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் வண்டலூர் பூங்கா பகுதி உற்சாகம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுபற்றி அறியாத ஏராளமான பொது மக்கள் இன்று காலை பூங்காவுக்கு வந்தனர். பூங்கா மூடப்பட்டிருப்பது தெரிந்ததும் அவர்கள் அருகில் உள்ள கிண்டி பூங்கா மற்றும் மெரினா கடற்கரை, பழவேற்காடு பகுதிகளுக்கு காணும் பொங்கலை கொண்டாட சென்றனர்.
இது குறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, காணும் பொங்கலுக்குள் பூங்காவை சீரமைத்துவிட வேண்டும் என்று பணிகள் நடந்தது.
ஆனால் மரக்கழிவுகள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக பூங்கா திறக்கப்படவில்லை, சீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது’ என்றார்.
காணும் பொங்கலையொட்டி வண்டலூர் பூங்காவில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பொது மக்கள் கூடுவது வழக்கம்.
குடும்பத்துடன் வரும் அவர்கள் நாள் முழுவதும் பூங்காவில் உற்சாகமாக பொழுதை கழித்து செல்வார்கள்.
கடந்த மாதம் வீசிய ‘வார்தா’ புயலின் போது வண்டலூர் பூங்காவில் இருந்த லட்சக்கணக்கான மரங்கள் சரிந்தன. சேதம் அடைந்த மரங்கள், விலங்குகளின் கூண்டுகள் இன்னும் சீரமைக்கப்படாததால் பூங்கா மூடியே கிடக்கிறது.
காணும் பொங்கலையொட்டி பூங்கா திறக்கப்படும் என்று பொது மக்கள் எதிர் பார்த்து இருந்தனர். ஆனால் மரக்கழிவுகள் முழுமையாக அகற்றப்படாததால் பூங்கா திறக்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் அறிவித்தனர். இது தொடர்பான அறிவிப்பு பலகை பூங்கா வாசல் முன்பு வைக்கப்பட்டு உள்ளது.
இதனால் காணும் பொங்கலுக்கு வண்டலூர் பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் வண்டலூர் பூங்கா பகுதி உற்சாகம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுபற்றி அறியாத ஏராளமான பொது மக்கள் இன்று காலை பூங்காவுக்கு வந்தனர். பூங்கா மூடப்பட்டிருப்பது தெரிந்ததும் அவர்கள் அருகில் உள்ள கிண்டி பூங்கா மற்றும் மெரினா கடற்கரை, பழவேற்காடு பகுதிகளுக்கு காணும் பொங்கலை கொண்டாட சென்றனர்.
இது குறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, காணும் பொங்கலுக்குள் பூங்காவை சீரமைத்துவிட வேண்டும் என்று பணிகள் நடந்தது.
ஆனால் மரக்கழிவுகள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக பூங்கா திறக்கப்படவில்லை, சீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது’ என்றார்.
Next Story






