என் மலர்
செய்திகள்

சிதம்பரம் அருகே போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சிதம்பரம்:
சிதம்பரத்தை அடுத்த மஞ்சகுழி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி அம்சவள்ளி (வயது 46). இவர்களது மகன் சரவணன் (28). இவரும் அதே பகுதியை சேர்ந்த சினேகா (17) என்பவரும் காதலித்து வந்தனர். அவர்கள் கடந்த நவம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றனர். அதன் பின் அவர்கள் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து சினேகாவின் தந்தை கல்யாணசுந்தரம் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பரங்கிப்பேட்டை போலீசார் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணைக்காக சரவணனின் தாய் அம்சவள்ளியை பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அம்சவள்ளியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அம்சவள்ளி வீடு திரும்பினார்.
தன்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதை நினைத்து அம்சவள்ளி மனம் உடைந்து காணப்பட்டார். வீட்டில் யாரிடமும் சரியாக பேசவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது அம்சவள்ளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அம்சவள்ளியின் உடலை பிரேதபரி சோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து அம்சவள்ளியின் உறவினர்கள் மற்றும் அதேபகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்றுகாலை ஒன்று திரண்டனர். அவர்கள் பி.முட்லூர் பகுதியில் புவனகிரி- கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு விஜயகுமார். சிதம்பரம் ஏ.எஸ்.பி. நிசா, இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த் தை நடத்தினர். அப்போது, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றபிறகு தான் அம்ச வள்ளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு போலீசாரின் விசாரணையே காரணம். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதையடுத்து மறியலை கைவிட்டு அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






