என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்: மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து 30 வாலிபர்கள் படுகாயம்
காஞ்சீபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து 30 வாலிபர்கள் படுகாயமடைந்தனர். காயம் அடைந்த இளைஞர்கள் முதலுதவிக்கு பின் வீடு திரும்பினர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை, கோவளம், மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புத்தாண்டையொட்டி போலீசார் பலத்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காஞ்சீபுரத்தில் பிரதான சாலைகளான காந்திரோடு, காமராஜர் சாலை, ரயில்வே ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் அதிவேகத்தில் கூக்குரலிட்ட படியே சுற்றிவந்தனர்.
அதிக வேகத்தின் காரணமாக பல இடங்களில் வாகனங்களில் இருந்து அவர்கள் கீழே விழுந்தனர். இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
நள்ளிரவில் அவர்கள் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு போதிய மருத்துவர்கள் இல்லாததால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டது.
இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து சப்-கலெக்டர் அருண் தம்புராஜீக்கு தகவல் தெரிவித்தனர். அவரது நடவடிக்கையால் உடனடியாக சிகிச்சைஅளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே புத்தாண்டு கொண்டாட்டத்தில் காயம் ஏற்பட்டதை வெளியில் சொல்ல விரும்பாத காயம் அடைந்த இளைஞர்கள் முதலுதவிக்கு பின் உடனடி யாக அவசரமாக வீடு திரும்பினர். அதிக வேகம் மற்றும் குடிபோதை காரணமாக இந்த விபத்துகள் நடந்துள்ளது.
புத்தாண்டையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை, கோவளம், மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புத்தாண்டையொட்டி போலீசார் பலத்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காஞ்சீபுரத்தில் பிரதான சாலைகளான காந்திரோடு, காமராஜர் சாலை, ரயில்வே ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் அதிவேகத்தில் கூக்குரலிட்ட படியே சுற்றிவந்தனர்.
அதிக வேகத்தின் காரணமாக பல இடங்களில் வாகனங்களில் இருந்து அவர்கள் கீழே விழுந்தனர். இதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
நள்ளிரவில் அவர்கள் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு போதிய மருத்துவர்கள் இல்லாததால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டது.
இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து சப்-கலெக்டர் அருண் தம்புராஜீக்கு தகவல் தெரிவித்தனர். அவரது நடவடிக்கையால் உடனடியாக சிகிச்சைஅளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே புத்தாண்டு கொண்டாட்டத்தில் காயம் ஏற்பட்டதை வெளியில் சொல்ல விரும்பாத காயம் அடைந்த இளைஞர்கள் முதலுதவிக்கு பின் உடனடி யாக அவசரமாக வீடு திரும்பினர். அதிக வேகம் மற்றும் குடிபோதை காரணமாக இந்த விபத்துகள் நடந்துள்ளது.
புத்தாண்டையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Next Story






