search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெடி விபத்தில் 8 பேர் பலி: பட்டாசு ஆலை போர்மென் உள்பட 2 பேர் கைது
    X

    வெடி விபத்தில் 8 பேர் பலி: பட்டாசு ஆலை போர்மென் உள்பட 2 பேர் கைது

    சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்தில் போர்மென் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கங்காங்கோட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கடந்த 26-ந்தேதி வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள எலுமிச்சங்காய்பட்டியை சேர்ந்த முனியராஜ், வீர லட்சுமி, முத்துமாரி, சரஸ்வதி, சுப்புத்தாய், செல்வி, செல்வம், சூரியநாராயண சாமி ஆகிய 8 பேர் உயிரிழந்தனர்.

    இதுதொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் ரமேஷ் கண்ணன், போர்மென் ஆரோக்கியராஜ், ஒப்பந்த தாரர் பேச்சியப்பன் ஆகிய 3 பேர் மீது ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தலைமறைவான ஆரோக்கியராஜ், பேச்சியப்பன் ஆகிய இருவரையும போலீசார் கைது செய்தனர். ஆலை உரிமையாளர் ரமேஷ் கண்ணன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×