என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆத்தூர் அருகே ஜெயலலிதா நினைவிடத்தை பார்க்க சென்ற பெண் கார் மோதி பலி
Byமாலை மலர்28 Dec 2016 5:23 AM GMT (Updated: 28 Dec 2016 5:23 AM GMT)
ஆத்தூர் அருகே ஜெயலலிதா நினைவிடத்தை பார்க்க சென்னைக்கு வந்துக்கொண்டிருந்த பெண் கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஆத்தூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த 55 பேர் சென்னையில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை பார்க்க முடிவு செய்தனர்.
அதற்காக அரசு பஸ்சை வாடகைக்கு பிடித்து நேற்றிரவு சென்னைக்கு புறப்பட்டனர். இந்த பஸ்சை ராமசாமி என்பவர் ஓட்டினார்.
நேற்று நள்ளிரவு இந்த பஸ் சேலம் மாவட்டம் ஆத்தூர்-தென்னங்குடி பாளையம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினர்.
பஸ்சில் இருந்தவர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்காக இறங்கி சென்றனர். அப்போது சாலையை கடக்க முயன்ற போது திருப்பூர் கடை வீதியை சேர்ந்த சரஸ்வதி (வயது 60) என்பவர் மீது ஊட்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு கார் மோதியது.
இதில் உடல் நசுங்கிய அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்று சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் காரில் வந்தவர்களும் காயம் அடைந்தனர். அவர்களும் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த 55 பேர் சென்னையில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை பார்க்க முடிவு செய்தனர்.
அதற்காக அரசு பஸ்சை வாடகைக்கு பிடித்து நேற்றிரவு சென்னைக்கு புறப்பட்டனர். இந்த பஸ்சை ராமசாமி என்பவர் ஓட்டினார்.
நேற்று நள்ளிரவு இந்த பஸ் சேலம் மாவட்டம் ஆத்தூர்-தென்னங்குடி பாளையம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினர்.
பஸ்சில் இருந்தவர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்காக இறங்கி சென்றனர். அப்போது சாலையை கடக்க முயன்ற போது திருப்பூர் கடை வீதியை சேர்ந்த சரஸ்வதி (வயது 60) என்பவர் மீது ஊட்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு கார் மோதியது.
இதில் உடல் நசுங்கிய அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்று சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் காரில் வந்தவர்களும் காயம் அடைந்தனர். அவர்களும் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X