என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.69 லட்சம் முறைகேடு: கூட்டுறவு சங்க செயலாளர், காசாளர் கைது
Byமாலை மலர்27 Dec 2016 10:24 AM GMT (Updated: 27 Dec 2016 10:24 AM GMT)
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 69 லட்ச ரூபாய் முறைகேடு செய்த செயலாளர் மற்றும் காசாளர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு பல லட்ச ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. மேலும் இதில் சங்கத்தின் செயலாளர் ராஜேந்திரன், காசாளர் ஏகாம்பரம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருப்பத்தூர் கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் பாஸ்கரன் வேலூர் மாவட்ட வணிக குற்ற புலனாய்வுத்துறை போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி முதல் 2011 பிப்ரவரி 21-ம் தேதி வரையான கால கட்டத்தில் 69 லட்சத்துக்கு 54 ஆயிரத்து 942 ரூபாய் பணம் கடன் கொடுத்ததாக போலியாக ஆவணங்கள் தயாரித்து முறைகேடு செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த முறைகேட்டில் ஈடுபட்ட செயலாளர் ராஜேந்திரன், காசாளர் ஏகாம்பரம் ஆகியோரை வணிக குற்றப் புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், விஜயன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் கைது செய்தனர். அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு பல லட்ச ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. மேலும் இதில் சங்கத்தின் செயலாளர் ராஜேந்திரன், காசாளர் ஏகாம்பரம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருப்பத்தூர் கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் பாஸ்கரன் வேலூர் மாவட்ட வணிக குற்ற புலனாய்வுத்துறை போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி முதல் 2011 பிப்ரவரி 21-ம் தேதி வரையான கால கட்டத்தில் 69 லட்சத்துக்கு 54 ஆயிரத்து 942 ரூபாய் பணம் கடன் கொடுத்ததாக போலியாக ஆவணங்கள் தயாரித்து முறைகேடு செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த முறைகேட்டில் ஈடுபட்ட செயலாளர் ராஜேந்திரன், காசாளர் ஏகாம்பரம் ஆகியோரை வணிக குற்றப் புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், விஜயன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் கைது செய்தனர். அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X