search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவன்- மனைவி உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்
    X

    பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவன்- மனைவி உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்

    பட்டதாரி பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவன்- மனைவி உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரன் வீதியை சேர்ந்தவர் மணிமொழி (வயது27) பி.எஸ்.சி பட்டதாரியான இவர் ஷேர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது உறவினர் சண்முகம் (62). இவரது மனைவி சாந்தி (52). இவர்களது மகன் கார்த்திக் (26). இவர்கள் ஈரோடு வீரப்பன் சத்திரம் கலைவாணர் வீதியில் வசித்து வருகிறார்கள்.

    இவர்களது வீட்டுக்கு மணிமொழி அடிக்கடி வந்து செல்வார். அப்போது சண்முகமும், சாந்தியும் தங்களது மகன் கார்த்திக்கை மணிமொழிக்கு திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை கூறினர்.

    இதன் பிறகு மணிமொழியை ஏமாற்றி பணம்- நகைகளை வாங்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கார்த்திக்குக்கு மணிமொழி எழுதிய கடிதம் பற்றி வெளியில் சொல்வதாகவும் அவர்கள் மிரட்டினார்கள்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த மணிமொழி கடந்த 23.9.2013 அன்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் தனது தற்கொலைக்கான காரணம் பற்றி ஒரு கடிதத்தையும் எழுதி இருந்தார்.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகம், இவரது மனைவி சாந்தி, இவர்களது மகன் கார்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை ஈரோடு மகளிர் கோர்ட்டு நீதிபதி திருநாவுக்கரசு இன்று விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட சண்முகம், சாந்தி, கார்த்திக் ஆகிய 3 பேருக்கும் 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரமும் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 2 வருடம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.

    இந்த வழக்கில் அரசு வக்கீல் சுமதி ஆஜரானார்.
    Next Story
    ×