என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவையில் சிகிச்சை பெற்று வரும் சுப்பிரமணிய சுவாமியுடன் தா.பாண்டியன் சந்திப்பு
கோவை:
கோவை சிங்காநல்லூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் திராவிடர் இயக்க கொள்கை பிரகடன நூற்றாண்டு நிறைவு விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டார்.
முன்னதாக அவர் கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆர்ய வைத்திய பார்மசிக்கு சென்றார். அங்கு பாரதீய ஜனதா தலைவர் சுப்பிரமணியசுவாமியும் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. இதையடுத்து அவரை தா.பாண்டியன் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
இதுகுறித்து தா.பாண்டியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட போது மேடையில் இருந்த எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது கோவை ஆர்ய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றேன். அதன தொடர்ச்சியாக சிகிச்சை பெறுவதற்கு அங்கு வந்தேன். அப்போது சுப்பிர மணிய சுவாமியும் அங்கு சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது. எனவே அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். அரசியல் ரீதியாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்