என் மலர்
செய்திகள்

பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடப்பதை படத்தில் காணலாம்.
கடலூரில் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியை வீட்டில் ரூ.3 லட்சம் நகை கொள்ளை
கடலூரில் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியை வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
கடலூர் செம்மண்டலம் எப்.சி.ஐ.நகரைச் சேர்ந்தவர் பாண்டியன். கோவையில் வேளாண்மை துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி கலைவாணி (வயது 40). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
கலைவாணி கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டை பூட்டிவிட்டு தனது மகள்கள், மகனுடன் அந்த பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார்.
இதைநோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர். வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் லேப்- டாப் ஆகியவைகளை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளை போன நகை-பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

இன்று காலை வீட்டுக்கு வந்த கலைவாணி முன்பக்க கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றார். வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை மற்றும் லேப்-டாப் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.
பேராசிரியை வீட்டில் கொள்ளையடித்தது பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளைக்கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்தகொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் செம்மண்டலம் எப்.சி.ஐ.நகரைச் சேர்ந்தவர் பாண்டியன். கோவையில் வேளாண்மை துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி கலைவாணி (வயது 40). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
கலைவாணி கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டை பூட்டிவிட்டு தனது மகள்கள், மகனுடன் அந்த பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார்.
இதைநோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர். வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் லேப்- டாப் ஆகியவைகளை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளை போன நகை-பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

இன்று காலை வீட்டுக்கு வந்த கலைவாணி முன்பக்க கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றார். வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை மற்றும் லேப்-டாப் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.
பேராசிரியை வீட்டில் கொள்ளையடித்தது பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளைக்கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்தகொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






