என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தாயிடம் தகராறு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் கைது
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த வடக்கு பொய்கை நல்லூர் சிவன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது38). இவரது தம்பி ராஜேந்திரன் (33). தொழிலாளி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
ராஜேந்திரன் தினமும் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். அதேபோல நேற்று இரவும் ராஜேந்திரன் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் தனது தாய் பஞ்சவர்ணத்திடம் தகராறு செய்தார். இதை பாலமுருகன் தட்டிக்கேட்டார். இதனால் அண்ணன்- தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், அரிவாளால் ராஜேந்திரனை வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராசேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்