என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கவுரவ கொலை செய்வதாக சப்-கலெக்டர் அலுவலகத்தில் காதல் ஜோடி புகார்
Byமாலை மலர்16 Dec 2016 8:20 AM GMT (Updated: 16 Dec 2016 8:20 AM GMT)
கவுரவ கொலை செய்வதாக இரு வீட்டாரும் மிரட்டுகிறார்கள் என பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் காதல் ஜோடி புகார் அளித்துள்ளனர்.
பொள்ளாச்சி:
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகஜோதி. இவர் சங்கரன் கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
அப்போது இவருக்கும் இதே கல்லூரியில் படிக்கும் மாதவன் என்ற மாணவருக்கும் காதல் ஏற்பட்டது. இது பற்றி தெரியவந்ததும் இரு வீட்டிலும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி பழனி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலத்திற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது, ‘எங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். எங்களை இரு வீட்டாரும் கவுரவ கொலை செய்யும் நோக்கில் மிரட்டி வருகின்றனர். எனவே எங்கள் உயிருக்கு பாதுகாப்பு தரவேண்டும்’ என்று அதில் கூறியிருந்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். பின்னர் காதல் ஜோடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகஜோதி. இவர் சங்கரன் கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
அப்போது இவருக்கும் இதே கல்லூரியில் படிக்கும் மாதவன் என்ற மாணவருக்கும் காதல் ஏற்பட்டது. இது பற்றி தெரியவந்ததும் இரு வீட்டிலும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி பழனி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலத்திற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது, ‘எங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். எங்களை இரு வீட்டாரும் கவுரவ கொலை செய்யும் நோக்கில் மிரட்டி வருகின்றனர். எனவே எங்கள் உயிருக்கு பாதுகாப்பு தரவேண்டும்’ என்று அதில் கூறியிருந்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். பின்னர் காதல் ஜோடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X