என் மலர்tooltip icon

    செய்திகள்

    வார்தா புயலால் மறைமலைநகரில் 5-வது நாளாக மின் தடை
    X

    வார்தா புயலால் மறைமலைநகரில் 5-வது நாளாக மின் தடை

    வார்தா புயலால் மறைமலைநகரில் 5-வது நாளாக மின் தடை நீடிக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
    செங்கல்பட்டு:

    மறைமலைநகரை அடுத்து உள்ள கலிவந்தப்பட்டு, கடம்பூர், திருக்கச்சூர், மற்றும் மறைமலைநகர் தொழிற்பேட்டை பகுதியில் வார்தா புயலின் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்ததில் மின்சார கம்பங்கள் உடைந்து பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

    இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மறைமலைநகரில் மொத்தம் 220 மின் கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளது. பல இடங்களில் மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகம் தடைப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் லாரியின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

    தொடர்ந்து மின் ஊழியர்கள் பணி செய்து வந்தாலும் நிலைமை சீர் அடைய இன்னும் ஒரு சில நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×