என் மலர்
செய்திகள்

பண்ருட்டியில் நடுவழியில் நின்ற கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில்
பண்ருட்டியில் கேட்கீப்பர் தூங்கியதால் சிக்னல் கிடைக்காமல் நடுவழியில் நின்ற கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
பண்ருட்டி:
காரைக்காலில் இருந்து சென்னைக்கு கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.
இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு 1.05 மணியளவில் பண்ருட்டியை நோக்கி வந்தது. பண்ருட்டி அருகே திருவதிகையில் ரெயில்வே கேட் உள்ளது.
இங்குள்ள கேட்கீப்பர் சிவமூர்த்தி ரெயில் வருவது அறியாமல் தூங்கிவிட்டார். ரெயில்வே கேட்டை அவர் மூடவில்லை.
இதனால் சிக்னல் கிடைக்காமல் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவதிகை ரெயில்வேகேட் அருகே டிரைவர் நிறுத்தினார்.
ரெயிலை விட்டு இறங்கி வந்த அவர் தூங்கிக்கொண்டிருந்த கேட்கீப்பரை தட்டி எழுப்பினார்.
பின்னர் ரெயில்வேகேட் கீப்பர் தூங்கிக்கொண்டிருந்தது குறித்து உயர்அதிகாரிகளுக்கு பண்ருட்டி ஸ்டேசன் மாஸ்டர் புகழேந்தி தகவல் தெரிவித்தார்.
கேட்கீப்பரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் 2 மணியளவில் ரெயில்வே கேட் பூட்டப்பட்டது. இதையடுத்து 1 மணி நேரம் தாமதமாக கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது.
இந்தசம்பவத்தால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்காலில் இருந்து சென்னைக்கு கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.
இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு 1.05 மணியளவில் பண்ருட்டியை நோக்கி வந்தது. பண்ருட்டி அருகே திருவதிகையில் ரெயில்வே கேட் உள்ளது.
இங்குள்ள கேட்கீப்பர் சிவமூர்த்தி ரெயில் வருவது அறியாமல் தூங்கிவிட்டார். ரெயில்வே கேட்டை அவர் மூடவில்லை.
இதனால் சிக்னல் கிடைக்காமல் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவதிகை ரெயில்வேகேட் அருகே டிரைவர் நிறுத்தினார்.
ரெயிலை விட்டு இறங்கி வந்த அவர் தூங்கிக்கொண்டிருந்த கேட்கீப்பரை தட்டி எழுப்பினார்.
பின்னர் ரெயில்வேகேட் கீப்பர் தூங்கிக்கொண்டிருந்தது குறித்து உயர்அதிகாரிகளுக்கு பண்ருட்டி ஸ்டேசன் மாஸ்டர் புகழேந்தி தகவல் தெரிவித்தார்.
கேட்கீப்பரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் 2 மணியளவில் ரெயில்வே கேட் பூட்டப்பட்டது. இதையடுத்து 1 மணி நேரம் தாமதமாக கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது.
இந்தசம்பவத்தால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






