என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட செல்வராணி.
    X
    கைது செய்யப்பட்ட செல்வராணி.

    புதிய காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலனை தீர்த்துக் கட்டிய பெண்

    பவானிசாகர் அருகே புதிய காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலனை தீர்த்துக் கட்டிய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம் பாளையத்தில் வசிப்பவர் செல்வராணி(வயது35). திருமணம் ஆகி கணவர் இறந்துவிட்டார். தற்போது இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    அதே கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வந்த துரைமுருகவேல் என்பவருடன் செல்வராணிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த ராஜூ என்பவருடன் செல்வராணிக்கு பழக்கம் ஏற்பட்டு அதுவும் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் துரைமுருகவேலுக்கு தெரியாமல் ஜாலியாக இருந்து வந்தனர்.

    இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் துரைமுருகவேலுக்கு தெரிய வந்தது. ஆத்திரம் அடைந்த அவர் செலவராணியை சத்தம் போட்டார். இது தொடர்பாக அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

    இது பற்றி புதிய கள்ளக்காதலன் ராஜூவிடம் செல்வராணி கூறி வருத்தப்பட்டார். துரைமுருகவேல் இருக்கும் வரை நம்மால் சந்தோஷமாக இருக்க முடியாது. அவரை தீர்த்துக்கட்டி விட வேண்டியது தான் என்று திட்டம் தீட்டினார்கள். அந்த திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    நேற்று முன்தினம் துரை முருகவேலுக்கு செல்வராணி தூக்க மாத்திரையை காப்பியில் கலந்து கொடுத்தார். அதை குடித்த துரைமுருகவேல் மயங்கினார். உடனே ராஜூக்கு தகவல் கொடுக்க உடனடியாக அவர் விரைந்து வந்தார்.

    பிறகு இருவரும் சேர்ந்து துரை முருகவேலின் கழுத்தை கயிற்றால் இறுக்கினர். சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பிறகு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்தநிலையில் துரை முருகவேலின் நண்பர் சுப்பிரமணி என்பவர் அவரை தேடி வந்தார். வீட்டில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு திடுக்கிட்டார்.

    இது குறித்து பவானிசாகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினர். செல்வராணியை பிடித்து விசாரித்த போது நானும் காதலன் ராஜூவும் சேர்ந்துதான் துரை முருகவேலை கழுத்தை நெரித்து கொன்றோம் என்று கூறினார்.

    இதையொட்டி செல்வராணி கைது செய்யப்பட்டார். புதிய கள்ளக்காதலன் ராஜூவை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×