என் மலர்
செய்திகள்

புயல் மழை பாதிப்பு: காஞ்சீபுரம் மாவட்டத்தில் 5 அமைச்சர்கள் முகாம்
புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைச்சர்கள் கே.வி.வீரமணி, செல்லூர் ராஜு, சரோஜா, ராஜேந்திர பாலாஜி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் முகாமிட்டு உள்ளனர்.
காஞ்சீபுரம்:
வார்தா புயலால் காஞ்சீபுரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின் சப்ளை, மற்றும் போக்குவரத்து இன்னும் முழுமையாக சரி செய்யப்படவில்லை.
மின்தடை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைச்சர்கள் கே.வி.வீரமணி, செல்லூர் ராஜு, சரோஜா, ராஜேந்திர பாலாஜி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் முகாமிட்டு உள்ளனர்.
மீட்பு பணிகள் குறித்து மாமல்லபுரம் பேரூராட்சியில் 5 அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர்கள் ஒவ்வொரு வரும் தனித்தனி இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். அமைச்சர் செல்லூர் ராஜு, கானத்தூர், ரெட்டிக்குப்பம், கரிக்காட்டுகுப்பம், குன்றக்காடு ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ளார்.
அமைச்சர் கே.சி.வீரமணி, பரமன்கேணிகுப்பம், பனையூர், சின்னகுப்பம், கடப்பாக்கம் பகுதியிலும், அமைச்சர் சரோஜா புதுகல் பாக்கம், நெம்மேலி, பகுதியிலும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடலூர் சின்னகுப்பம், பெரியகுப்பம், ஆலக்குப்பம் பகுதியலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மாமல்லபுரம், கொக்கிலமேடு, சதுரங்கபட்டினம் பகுதியிலும் முகாமிட்டு மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இயல்புநிலை விரைவில் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வார்தா புயலால் காஞ்சீபுரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின் சப்ளை, மற்றும் போக்குவரத்து இன்னும் முழுமையாக சரி செய்யப்படவில்லை.
மின்தடை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைச்சர்கள் கே.வி.வீரமணி, செல்லூர் ராஜு, சரோஜா, ராஜேந்திர பாலாஜி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் முகாமிட்டு உள்ளனர்.
மீட்பு பணிகள் குறித்து மாமல்லபுரம் பேரூராட்சியில் 5 அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர்கள் ஒவ்வொரு வரும் தனித்தனி இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள். அமைச்சர் செல்லூர் ராஜு, கானத்தூர், ரெட்டிக்குப்பம், கரிக்காட்டுகுப்பம், குன்றக்காடு ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ளார்.
அமைச்சர் கே.சி.வீரமணி, பரமன்கேணிகுப்பம், பனையூர், சின்னகுப்பம், கடப்பாக்கம் பகுதியிலும், அமைச்சர் சரோஜா புதுகல் பாக்கம், நெம்மேலி, பகுதியிலும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடலூர் சின்னகுப்பம், பெரியகுப்பம், ஆலக்குப்பம் பகுதியலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மாமல்லபுரம், கொக்கிலமேடு, சதுரங்கபட்டினம் பகுதியிலும் முகாமிட்டு மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இயல்புநிலை விரைவில் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






