என் மலர்
செய்திகள்

பெருங்களத்தூரில் இளம்பெண் கொலை: என்ஜினீயர் வாக்குமூலம்
பெருங்களத்தூரில் இளம்பெண் கொலையில் கைதான என்ஜினீயர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதைப்பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம் கருமாரி அம்மன் கோவிலை சேர்ந் தவர் ஆதிமூலம். இவரது மகள் சோனியா (வயது 23). பிளஸ்-2 படித்துள்ள இவர் கிண்டியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை சோனியா வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பெருங்களத்தூர் பஸ்நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த நெடுங்குன்றத்தை சேர்ந்த என்ஜினீயர் பிரசாத் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திடீரென பிரசாத் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் சோனியாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் துடித்த சோனியா பரிதாபமாக இறந்தார். பொது மக்கள் மத்தியில் பஸ்நிலையத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தப்பி ஓடிய என்ஜினீயர் பிரசாத் பீர்க்கன்கரணை போலீசில் சரண் அடைந்தார். அவர் போலீசில் அளித்ள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
நானும் சோனியாவும் ஒரே பகுதியில் வசித்து வருகிறோம். 6 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். கடந்த ஒரு மாதமாக சோனியா என்னிடம் பேச வில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அடிக்கடி பிசியாக இருந்தது.

இதுபற்றி அவரிடம் கேட்க பின்தொடர்ந்து வந்தேன். பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் நான் காத்திருந்த போது பஸ்சில் வந்த சோனியா வேறு வாலிபருடன் பேசினார்.
இதுபற்றி கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட் டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் சிறிய கத்தியால் சோனியாவின் கழுத்தை அறுத்தேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதுபற்றி கொலையுண்ட சோனியாவின் தம்பி கார்த்திக் கூறும் போது, சோனியாவும் பிரசாத்தும் பழகியது எங்களுக்கு தெரியும். இதனை நாங்கள் கண்டித்தோம். பிரசாத்தின் நடவடிக்கை சரியில்லை என்று தெரிந்ததும் அவரிடம் பேசுவதை சோனியா தவிர்த்தார்.
ஆனாலும் வேலைக்கு சென்று வரும்போது தினமும் பிரசாத் பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத் தார். இதனை நாங்கள் கண்டித்தும் பிரசாத் கேட்கவில்லை.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் எண்ணை சோனியா மாற்றினார். நேற்று மாலை மீண்டும் சோனியாவை பின்தொடர்ந்து வந்து பிரசாத் கொலை செய்து விட்டார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
கொலையாளி பிரசாத் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமோ படித்துள்ளார். அவர் ஊரப்பாக்கத்தில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த பிரசாத்திடம் இன்று காலை வரை சோனியா இறந்தது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து இருந்தனர்.
இன்று மதியத்திற்கு பிறகே சோனியா இறந்ததாக பிரசாத்திடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எந்தவித வருத்தமும் படவில்லை. அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இன்று மாலை பிரசாத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் போலீசார் அடைக்கிறார்கள்.
கொலையுண்ட சோனியாவின் உடல் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இன்று பிற்பகல் பிரேத பரிசோதனை முடிந்து சோனியாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம் கருமாரி அம்மன் கோவிலை சேர்ந் தவர் ஆதிமூலம். இவரது மகள் சோனியா (வயது 23). பிளஸ்-2 படித்துள்ள இவர் கிண்டியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை சோனியா வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பெருங்களத்தூர் பஸ்நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த நெடுங்குன்றத்தை சேர்ந்த என்ஜினீயர் பிரசாத் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திடீரென பிரசாத் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் சோனியாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் துடித்த சோனியா பரிதாபமாக இறந்தார். பொது மக்கள் மத்தியில் பஸ்நிலையத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தப்பி ஓடிய என்ஜினீயர் பிரசாத் பீர்க்கன்கரணை போலீசில் சரண் அடைந்தார். அவர் போலீசில் அளித்ள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
நானும் சோனியாவும் ஒரே பகுதியில் வசித்து வருகிறோம். 6 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். கடந்த ஒரு மாதமாக சோனியா என்னிடம் பேச வில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அடிக்கடி பிசியாக இருந்தது.

இதுபற்றி அவரிடம் கேட்க பின்தொடர்ந்து வந்தேன். பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் நான் காத்திருந்த போது பஸ்சில் வந்த சோனியா வேறு வாலிபருடன் பேசினார்.
இதுபற்றி கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட் டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் சிறிய கத்தியால் சோனியாவின் கழுத்தை அறுத்தேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதுபற்றி கொலையுண்ட சோனியாவின் தம்பி கார்த்திக் கூறும் போது, சோனியாவும் பிரசாத்தும் பழகியது எங்களுக்கு தெரியும். இதனை நாங்கள் கண்டித்தோம். பிரசாத்தின் நடவடிக்கை சரியில்லை என்று தெரிந்ததும் அவரிடம் பேசுவதை சோனியா தவிர்த்தார்.
ஆனாலும் வேலைக்கு சென்று வரும்போது தினமும் பிரசாத் பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத் தார். இதனை நாங்கள் கண்டித்தும் பிரசாத் கேட்கவில்லை.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் எண்ணை சோனியா மாற்றினார். நேற்று மாலை மீண்டும் சோனியாவை பின்தொடர்ந்து வந்து பிரசாத் கொலை செய்து விட்டார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
கொலையாளி பிரசாத் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமோ படித்துள்ளார். அவர் ஊரப்பாக்கத்தில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த பிரசாத்திடம் இன்று காலை வரை சோனியா இறந்தது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து இருந்தனர்.
இன்று மதியத்திற்கு பிறகே சோனியா இறந்ததாக பிரசாத்திடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எந்தவித வருத்தமும் படவில்லை. அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இன்று மாலை பிரசாத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் போலீசார் அடைக்கிறார்கள்.
கொலையுண்ட சோனியாவின் உடல் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இன்று பிற்பகல் பிரேத பரிசோதனை முடிந்து சோனியாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
Next Story






