என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தடையை மீறி சாலை மறியல்: பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்பட 6 பேர் விடுதலை
Byமாலை மலர்8 Dec 2016 10:35 AM GMT (Updated: 8 Dec 2016 10:35 AM GMT)
தடையை மீறி சாலை மறியல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்பட 6 பேரை விடுதலை செய்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கடலூர்:
2013-ம் ஆண்டு வன்முறையை தூண்டி விடுவதாக கூறி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர் சங்க தலைவர் குரு ஆகியோர் கடலூர் மாவட்டத்துக்குள் நுழையக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இந்த தடையை நீக்கக் கோரி பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைத்தலைவர் தாமரைக்கண்ணன், முன்னாள் மத்திய மந்திரி வேலு, முன்னாள் எம்.பி.தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.கோவிந்தசாமி, புதுவை மாநில அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கடலூரில் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதையடுத்து தடையை மீறி சாலைமறியலில் ஈடுபட்டதாக ஜி.கே.மணி உள்பட 6 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்தவழக்கு விசாரணை கடலூர் நீதித்துறை 2-ம் எண் நடுவர் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகள் நடைபெற்று வந்தது.
இறுதிகட்ட விசாரணை இன்று நடைபெற்றது. நீதிபதி ரமேஷ் விசாரணை நடத்தினார்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணைத்தலைவர் தாமரைக்கண்ணன், முன்னாள் மத்திய மந்திரி வேலு, முன்னாள் எம்.பி.தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.கோவிந்தசாமி, புதுவை மாநில அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். பா.ம.க.சார்பில் வக்கீல் தமிழரசன் ஆஜராகி வாதாடினார்.
2013-ம் ஆண்டு வன்முறையை தூண்டி விடுவதாக கூறி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர் சங்க தலைவர் குரு ஆகியோர் கடலூர் மாவட்டத்துக்குள் நுழையக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இந்த தடையை நீக்கக் கோரி பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைத்தலைவர் தாமரைக்கண்ணன், முன்னாள் மத்திய மந்திரி வேலு, முன்னாள் எம்.பி.தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.கோவிந்தசாமி, புதுவை மாநில அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கடலூரில் சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதையடுத்து தடையை மீறி சாலைமறியலில் ஈடுபட்டதாக ஜி.கே.மணி உள்பட 6 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்தவழக்கு விசாரணை கடலூர் நீதித்துறை 2-ம் எண் நடுவர் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகள் நடைபெற்று வந்தது.
இறுதிகட்ட விசாரணை இன்று நடைபெற்றது. நீதிபதி ரமேஷ் விசாரணை நடத்தினார்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணைத்தலைவர் தாமரைக்கண்ணன், முன்னாள் மத்திய மந்திரி வேலு, முன்னாள் எம்.பி.தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.கோவிந்தசாமி, புதுவை மாநில அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். பா.ம.க.சார்பில் வக்கீல் தமிழரசன் ஆஜராகி வாதாடினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X