என் மலர்
செய்திகள்

ஆளக்கூடாது என்றுதானே நினைத்தோம் வாழக்கூடாது என நினைக்கவில்லையே: தி.மு.க.வினர் பேனர்
ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி அவரை பாராட்டி பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். அதில் உள்ள வாசகங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோபி:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் கோபியில் நகர தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி அவரை பாராட்டி பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில் உள்ள வாசகங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில் உள்ள வாசகங்கள்:-
‘‘எதிரியாக இருந்தாலும் எதிரில் நிற்பது சிங்கம் என்றல்லவா பெருமை கொண்டிருந்தோம்... நீங்கள் ஆளக்கூடாது என்று தானே நினைத்தோம்... வாழக் கூடாது என ஒரு போதும் நினைக்கவில்லையே தாயே... இனி எங்கே காண்போம்... இதுபோன்ற பெருமை கொண்ட பேரூயிரே!!
இந்த வாசகங்களுடன் ஜெயலலிதா உருவப் படமும் இடம் பெற்றிருந்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் கோபியில் நகர தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி அவரை பாராட்டி பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில் உள்ள வாசகங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில் உள்ள வாசகங்கள்:-
‘‘எதிரியாக இருந்தாலும் எதிரில் நிற்பது சிங்கம் என்றல்லவா பெருமை கொண்டிருந்தோம்... நீங்கள் ஆளக்கூடாது என்று தானே நினைத்தோம்... வாழக் கூடாது என ஒரு போதும் நினைக்கவில்லையே தாயே... இனி எங்கே காண்போம்... இதுபோன்ற பெருமை கொண்ட பேரூயிரே!!
இந்த வாசகங்களுடன் ஜெயலலிதா உருவப் படமும் இடம் பெற்றிருந்தது.
Next Story






