என் மலர்
செய்திகள்

அரசு பள்ளியில் அடி-தடி மோதல்: 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு
திருப்புவனம் அரசு பள்ளியில் அடிதடியில் ஈடுபட்ட 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் செல்வப்பாண்டி, ஆங்கில ஆசிரியர் சரவணன் இருவரும் நேற்று முன் தினம் பள்ளியில் இறை வணக்க நிகழ்ச்சி முடிந்து செல்கையில் மாணவர்கள் முன்னிலையில் அடிதடியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் 2 ஆசிரியர்களிடமும் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் விசாரணை நடத்தினார். இதையடுத்து இருவரையும் சஸ்பெண்டு செய்து உத்தர விட்டார்.
இதே பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் ஒருவரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story






