என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
இரும்பு கம்பி வைக்கப்பட்டிருந்த ரெயில் தண்டவாளத்தை படத்தில் காணலாம்
மானாமதுரை அருகே தண்டவாளத்தில் இரும்பு கம்பியை வைத்து நாசவேலை
By
மாலை மலர்29 Nov 2016 2:16 AM GMT (Updated: 29 Nov 2016 2:16 AM GMT)

மானாமதுரை அருகே ரெயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பி வைத்திருந்ததை ஊழியர்கள் கண்டுபிடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மானாமதுரை:
விருதுநகர்-திருச்சி பாசஞ்சர் ரெயில் மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை போல் வந்தது. அங்கு பயணிகளை ஏற்றிய பின் 8 மணிக்கு சிவகங்கைக்கு புறப்பட்டு சென்றது. மானாமதுரை வைகை ஆற்றுப் பாலத்தை கடந்து ரெயில் சென்றபோது திடீரென ரெயிலில் பலத்த அதிர்வு ஏற்பட்டது.
இதை என்ஜினில் இருந்த ஊழியர்கள் உணர்ந்து, இதுகுறித்து உடனே மானாமதுரை ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே, ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சென்று பார்த்தபோது, அரை அடி நீளமுள்ள இரும்பு கம்பி ஒன்று தண்டவாளத்தின் இணைப்பில் செருகப்பட்டிருந்ததும், விருதுநகர் பாசஞ்சர் ரெயில் சென்ற வேகத்தில் அது உடைந்திருந்ததும் கண்டறியப்பட்டது.
நல்ல வேளையாக பாசஞ்சர் ரெயில் விபத்தில் சிக்காமல் தப்பிச்சென்று விட்டது.
இந்நிலையில், காலை 8.40 மணி அளவில் சென்னை எழும்பூரில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகங்கையை அடுத்த கொன்னக்குளம் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் இரும்பு கம்பி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்ததால், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் கொன்னக்குளம் ரெயில் நிலையத்தியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
சம்பவ இடத்தை ரெயில்வே போலீசார் ஆய்வு செய்தபிறகு, ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். ரெயிலை இயக்கினால் பாதிப்பு இல்லை என கண்டறிந்த பின் கொன்னக்குளம் ரெயில் நிலையத்தில் இருந்து ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
ரெயில்வே போலீசார் தண்டவாளத்தில் இரும்பு கம்பியை வைத்த மர்மநபர்கள் யார், ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
விருதுநகர்-திருச்சி பாசஞ்சர் ரெயில் மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை போல் வந்தது. அங்கு பயணிகளை ஏற்றிய பின் 8 மணிக்கு சிவகங்கைக்கு புறப்பட்டு சென்றது. மானாமதுரை வைகை ஆற்றுப் பாலத்தை கடந்து ரெயில் சென்றபோது திடீரென ரெயிலில் பலத்த அதிர்வு ஏற்பட்டது.
இதை என்ஜினில் இருந்த ஊழியர்கள் உணர்ந்து, இதுகுறித்து உடனே மானாமதுரை ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே, ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சென்று பார்த்தபோது, அரை அடி நீளமுள்ள இரும்பு கம்பி ஒன்று தண்டவாளத்தின் இணைப்பில் செருகப்பட்டிருந்ததும், விருதுநகர் பாசஞ்சர் ரெயில் சென்ற வேகத்தில் அது உடைந்திருந்ததும் கண்டறியப்பட்டது.
நல்ல வேளையாக பாசஞ்சர் ரெயில் விபத்தில் சிக்காமல் தப்பிச்சென்று விட்டது.
இந்நிலையில், காலை 8.40 மணி அளவில் சென்னை எழும்பூரில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகங்கையை அடுத்த கொன்னக்குளம் ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் இரும்பு கம்பி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்ததால், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் கொன்னக்குளம் ரெயில் நிலையத்தியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
சம்பவ இடத்தை ரெயில்வே போலீசார் ஆய்வு செய்தபிறகு, ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர். ரெயிலை இயக்கினால் பாதிப்பு இல்லை என கண்டறிந்த பின் கொன்னக்குளம் ரெயில் நிலையத்தில் இருந்து ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
ரெயில்வே போலீசார் தண்டவாளத்தில் இரும்பு கம்பியை வைத்த மர்மநபர்கள் யார், ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
