என் மலர்
செய்திகள்

வேதாரண்யத்தில் போதையில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
நாகை மாவட்டம் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் பணியின்போது போதையில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கண்ணதாசன் (54). இவர் கடந்த 17-ந் தேதி இரவு பணியில் இருந்தார். அவருடன் 2 ஊர்காவல் படையினரும் பணியில் இருந்துள்ளனர். அப்போது கண்ணதாசன் மது குடித்துவிட்டு பணியிலிருந்த 2 ஊர் காவல் படையினரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த வேதாரண்யம் சரக டி.எஸ்.பி. பாலு அறிவுரையின்படி குடிபோதையிலிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ அறிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு டி.எஸ்.பி. அனுப்பி வைத்தார். அதில் கண்ணதாசன் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவிட்டார். இந்த அதிரடி நடவடிக்கை போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கண்ணதாசன் (54). இவர் கடந்த 17-ந் தேதி இரவு பணியில் இருந்தார். அவருடன் 2 ஊர்காவல் படையினரும் பணியில் இருந்துள்ளனர். அப்போது கண்ணதாசன் மது குடித்துவிட்டு பணியிலிருந்த 2 ஊர் காவல் படையினரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த வேதாரண்யம் சரக டி.எஸ்.பி. பாலு அறிவுரையின்படி குடிபோதையிலிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ அறிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு டி.எஸ்.பி. அனுப்பி வைத்தார். அதில் கண்ணதாசன் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவிட்டார். இந்த அதிரடி நடவடிக்கை போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






