என் மலர்tooltip icon

    செய்திகள்

    சில்லரை தட்டுப்பாட்டை கண்டித்து வணிகர்கள் போராட்டம்: விக்கிரமராஜா பேட்டி
    X

    சில்லரை தட்டுப்பாட்டை கண்டித்து வணிகர்கள் போராட்டம்: விக்கிரமராஜா பேட்டி

    ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு தடையால் ஏற்பட்டுள்ள சில்லரை தட்டுப்பாட்டை கண்டித்து மிகப்பெரிய அளவில் வணிகர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

    மதுராந்தகம், நவ. 16-

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுராந்தகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா, கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதா வது:-

    ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பால் சிறு வணிகர் முதல் பெரு வணி கர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய வணிகத்தில் மிகப் பெரிய தொகை கையாள வேண்டிய சூழல் உள்ளது.

    வணிகர்கள் வங்கியில் பணத்தை போடுவதற்கும், எடுப்பதற்கும் கூட சுதந் திரமாக இல்லை. ஏற் கனவே, ஆன்லைன் வர்த்தகத் தால் வணிகர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

    சில்லரை தட்டுப்பாடு, வங்கி பரிவர்த்தனை குறித்த மாற்று வழிமுறை களை அரசு போர்கால அடிப்படையில் அறிவிக்க வேண்டும்.

    இந்த நிலை தொடர்ந்தால் வணிகர்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைகளின் முடி வுப்படி தமிழ்நாடு முழுக்க மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத் தப்படும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    கூட்டத்தில் மாவட்ட தலைவர் அமல்ராஜ், மாவட்ட செயலாளர் பிரபா கரன், இணைச் செயலாளர் பவித்ரா சீனிவாசன் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர்.

    Next Story
    ×