என் மலர்
செய்திகள்

திருப்பத்தூர் அருகே இன்று காலை விபத்து: 2 பேர் பலி
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே காளையார்கோவில் பக்கமுள்ள முத்தூரை சேர்ந்த நடராஜன் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது30). கருப்பையா மகன் ராமசந்திரன் (25). சாணாகுளத்தை சேர்ந்த அழகு மகன் முருகபாலன் (35) ஆகிய 3 பேரும் நேற்று காரில் திருச்சிக்கு சென்றனர்.
சிங்கப்பூருக்கு சென்ற உறவினரை வழி அனுப்பி விட்டு இன்று அதிகாலை ஊர் திரும்பினர். காரை கோபாலகிருஷ்ணன் ஓட்டினார். 3 மணி அளவில் காட்டாம்பூர் பை-பாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது காரும் திருக்கோஷ்டியூரில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கோபாலகிருஷ்ணன், காரில் வந்த முருகபாலன் ஆகிய இருவரும் அதே இடத்தில் பலியானார்கள். ராமச்சந்திரன் படுகாயம் அடைந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திருக்கோஷ்டியூரை சேர்ந்த போலீசார் மற்றும் தீயணைப்புப்படையினர் சென்று காரில் இடி பாடுக்குள் சிக்கி இருந்த ராமச்சந்திரனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் தெம்மாபட்டுவை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






