என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பாபிஷேக அழைப்பிதழை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காண்பித்த காட்சி.
    X
    கும்பாபிஷேக அழைப்பிதழை ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காண்பித்த காட்சி.

    காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு பிப்.1-ந்தேதி கும்பாபிஷேகம்

    காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு பிப்.1-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என்று காஞ்சி சங்கராசாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறி உள்ளார்.
    காஞ்சீபுரம்:

    பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு 1841-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 100 ஆண்டுக்கு பின் 1941-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் 1976-ம் ஆண்டும், கடைசியாக 1995-ம் ஆண்டும் கும்பாபிஷேகம் நடந்தது.

    காஞ்சீபுரம் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்த நிலையில் காமாட்சி கோவிலுக்கு அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி 1-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என்று காஞ்சி சங்கராசாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் காஞ்சி சங்கரமடத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் துர்முகி வருடம் தை மாதம் 19-ந்தேதி (2017-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி) உத்தராட்டதி நட்சத்திரத்தில் வசந்த பஞ்சமி சுப தினத்தில் காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் மீன லக்னத்தில் நடக்கிறது. கும்பாபிஷேக பணிக்காக ரூ.25 கோடி செலவிடப்பட்டு உள்ளது. அதில் தங்க விமானத்துக்கு மட்டும் ரூ.20 கோடி செலவிடப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×