என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாமல்லபுரம் அருகே கடத்தப்பட்ட புதுமாப்பிள்ளை கொன்று புதைப்பு
Byமாலை மலர்5 Nov 2016 3:38 AM GMT (Updated: 5 Nov 2016 3:38 AM GMT)
மாமல்லபுரம் அருகே மனைவியுடன் உறவினர் வீட்டுக்கு சென்ற புதுமாப்பிள்ளை சொத்துக்காக கடத்திக் கொலை செய்யப்பட்டார். போலீசார் புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.
மாமல்லபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள வெண்புருஷம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நைனார்குப்பத்தை சேர்ந்த ரங்கீலா என்ற பெண்ணுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி திருமணம் நடந்தது.
அக்டோபர் 8-ந்தேதி கார்த்திக் தனது மனைவியுடன் மாமல்லபுரத்தை அடுத்த சூளேரிக்காட்டு குப்பத்தில் உள்ள ரங்கீலாவின் பெரியம்மா மகள் ரஞ்சிதாவின் வீட்டுக்கு சென்றார். ரஞ்சிதாவின் கணவர் டில்லிபாபு (38) சினிமா ஸ்டண்ட் மாஸ்டர். அங்கிருந்த கார்த்திக் திடீரென மாயமானார்.
இதுகுறித்து அவரது மனைவி ரங்கீலா மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார். மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, சப்-இன்ஸ்பெக்டர் கமலதியாகராஜன் ஆகியோர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காணாமல்போன கார்த்திக்கை தேடிவந்தனர்.
இதற்கிடையில் ரஞ்சிதாவின் கணவர் டில்லிபாபு கார்த்திக்கை கொலை செய்து புதைத்துவிட்டதாக கூறி செங்கல்பட்டு கோர்ட்டில் அக்டோபர் 25-ந் தேதி சரண் அடைந்தார். இந்த நிலையில் நேற்று மாமல்லபுரம் போலீசார் டில்லிபாபுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.
விசாரணையின்போது டில்லிபாபு போலீசாரிடம், “என்னுடைய மனைவி ரஞ்சிதாவின் சித்தி மகள் ரங்கீலாவின் சொத்தை அபகரிப்பதற்கு அவரது கணவர் கார்த்திக் தடையாக இருந்தார். இதனால் அக்டோபர் 8-ந்தேதி கூலிப்படையின் துணையோடு அவரை செங்கல்பட்டை அடுத்த மாமண்டூர் பகுதிக்கு கடத்திச் சென்று கொலை செய்து அங்குள்ள பாலாற்று கரையோரம் புதைத்தேன்” என்று வாக்குமூலம் அளித்தார்.
மாமல்லபுரம் போலீசார் டில்லிபாபுவை இன்று (சனிக்கிழமை) மாமண்டூர் அழைத்துச் சென்று கார்த்திக் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காண உள்ளனர். அதன்பின்னர் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார் முன்னிலையில் கார்த்திக்கின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கேயே அரசு டாக்டர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதன் பிறகே அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? என்ற விவரம் தெரியவரும்.
டில்லிபாபு தமிழ் சினிமாவில் 3 படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள வெண்புருஷம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நைனார்குப்பத்தை சேர்ந்த ரங்கீலா என்ற பெண்ணுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி திருமணம் நடந்தது.
அக்டோபர் 8-ந்தேதி கார்த்திக் தனது மனைவியுடன் மாமல்லபுரத்தை அடுத்த சூளேரிக்காட்டு குப்பத்தில் உள்ள ரங்கீலாவின் பெரியம்மா மகள் ரஞ்சிதாவின் வீட்டுக்கு சென்றார். ரஞ்சிதாவின் கணவர் டில்லிபாபு (38) சினிமா ஸ்டண்ட் மாஸ்டர். அங்கிருந்த கார்த்திக் திடீரென மாயமானார்.
இதுகுறித்து அவரது மனைவி ரங்கீலா மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார். மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, சப்-இன்ஸ்பெக்டர் கமலதியாகராஜன் ஆகியோர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காணாமல்போன கார்த்திக்கை தேடிவந்தனர்.
இதற்கிடையில் ரஞ்சிதாவின் கணவர் டில்லிபாபு கார்த்திக்கை கொலை செய்து புதைத்துவிட்டதாக கூறி செங்கல்பட்டு கோர்ட்டில் அக்டோபர் 25-ந் தேதி சரண் அடைந்தார். இந்த நிலையில் நேற்று மாமல்லபுரம் போலீசார் டில்லிபாபுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.
விசாரணையின்போது டில்லிபாபு போலீசாரிடம், “என்னுடைய மனைவி ரஞ்சிதாவின் சித்தி மகள் ரங்கீலாவின் சொத்தை அபகரிப்பதற்கு அவரது கணவர் கார்த்திக் தடையாக இருந்தார். இதனால் அக்டோபர் 8-ந்தேதி கூலிப்படையின் துணையோடு அவரை செங்கல்பட்டை அடுத்த மாமண்டூர் பகுதிக்கு கடத்திச் சென்று கொலை செய்து அங்குள்ள பாலாற்று கரையோரம் புதைத்தேன்” என்று வாக்குமூலம் அளித்தார்.
மாமல்லபுரம் போலீசார் டில்லிபாபுவை இன்று (சனிக்கிழமை) மாமண்டூர் அழைத்துச் சென்று கார்த்திக் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காண உள்ளனர். அதன்பின்னர் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார் முன்னிலையில் கார்த்திக்கின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, அங்கேயே அரசு டாக்டர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதன் பிறகே அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? என்ற விவரம் தெரியவரும்.
டில்லிபாபு தமிழ் சினிமாவில் 3 படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X