என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.23 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைதான மின் வாரிய என்ஜினீயர் சஸ்பெண்டு
Byமாலை மலர்2 Nov 2016 4:21 AM GMT (Updated: 2 Nov 2016 4:21 AM GMT)
விருத்தாசலத்தில் மின் இணைப்பு வழங்க ரூ.23ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைதான மின் வாரிய என்ஜினீயரை சஸ்பெண்ட் செய்து கடலூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சிவானந்தம் உத்தரவிட்டார்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் டி.நகரை சேர்ந்தவர் சையத் உசேன். இவர் பஸ் நிலையம் அருகே தனக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டி வருகிறார்.
இந்த வணிக வளாகத்தில் உள்ள 3 கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க விருத்தாசலம் அருகேயுள்ள கண்டியாங்குப்பம் மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க, உதவி மின்பொறியாளர் இளங்கோவன் ரூ.23 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டார். இதுபற்றி சையத்உசேன் கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின்படி சையத்உசேன், ரசாயன பவுடர் தடவிய பணத்தை கடந்த 26-ந் தேதி கண்டியாங்குப்பம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்த உதவி மின்பொறியாளர் இளங்கோவனிடம் கொடுத்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், இளங்கோவனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த நிலையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான இளங்கோவனை சஸ்பெண்ட் செய்து கடலூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சிவானந்தம் உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் டி.நகரை சேர்ந்தவர் சையத் உசேன். இவர் பஸ் நிலையம் அருகே தனக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டி வருகிறார்.
இந்த வணிக வளாகத்தில் உள்ள 3 கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க விருத்தாசலம் அருகேயுள்ள கண்டியாங்குப்பம் மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால் கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க, உதவி மின்பொறியாளர் இளங்கோவன் ரூ.23 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டார். இதுபற்றி சையத்உசேன் கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின்படி சையத்உசேன், ரசாயன பவுடர் தடவிய பணத்தை கடந்த 26-ந் தேதி கண்டியாங்குப்பம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்த உதவி மின்பொறியாளர் இளங்கோவனிடம் கொடுத்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், இளங்கோவனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த நிலையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான இளங்கோவனை சஸ்பெண்ட் செய்து கடலூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சிவானந்தம் உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X