என் மலர்
செய்திகள்

புவனேஸ்வரி அம்மன் கோவிலில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விளக்கேற்றி வழிபாடு நடத்திய காட்சி.
அம்மன் பாதத்தில் வேட்பு மனுவை வைத்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தரிசனம்
புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமி கோவிலில் அம்மன் பாதத்தில் வேட்பு மனுவை வைத்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தரிசனம் செய்தார்.
புதுக்கோட்டை:
புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்வர் நாராயணசாமி தனது வேட்பு மனு படிவங்களுடன் புதுக்கோட்டைக்கு வந்தார்.
அங்கு ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்திற்கு சென்ற அவர், அங்கு 108 நெய் தீபங்கள் ஏற்றி, புவனேஸ்வரி அம்மன் மற்றும் அஷ்டபுஜ துர்க்கை அம்மனுக்கு பட்டு புடவை சாத்தி வழிபட்டார். அதன் பின்னர் வேட்பு மனு படிவங்களை அம்மன் பாதங்களில் வைத்து பூஜைகள் செய்து பெற்றுக்கொண் டார்.
பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடுவதற்கு வருகிற 2-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறேன். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 4 மாத கால ஆட்சியில் பல நல்ல திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளோம். தேர்தல் பிரசாரத்திற்கு வருமாறு தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை அழைத்துள்ளோம். அவரும் வருவதாக கூறியுள்ளார்.
காவிரி பிரச்சனையில் கர்நாடகாவிற்கு ஆதரவாகத் தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் உரிமையை விட்டுகொடுக்க முடியாது.
நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஜான் குமாரை நிர்பந்தப்படுத்தி ராஜினாமா செய்ய சொன்னதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் கிடையாது. ஜான் குமார் தற்போதும் எனது வெற்றிக்காக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
புதுச்சேரி மாநில எதிர்க்கட்சியான அ.தி.மு.க., சபாநாயகர் சட்டசபை குழுக்களை அமைக்க முன்வரவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால் புதுச்சேரி மாநில சபாநாயகரிடம் ஏற்கனவே அரசு சார்பில் சட்டசபை குழுக்களை அமைப்பதற்கான பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அது தாமதமாகிறது. விரைவில் சட்டசபை குழுக்களை சபா நாயகர் அறிவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுனருக்கும், புதுச் சேரி அரசிற்கும் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்வர் நாராயணசாமி தனது வேட்பு மனு படிவங்களுடன் புதுக்கோட்டைக்கு வந்தார்.
அங்கு ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்திற்கு சென்ற அவர், அங்கு 108 நெய் தீபங்கள் ஏற்றி, புவனேஸ்வரி அம்மன் மற்றும் அஷ்டபுஜ துர்க்கை அம்மனுக்கு பட்டு புடவை சாத்தி வழிபட்டார். அதன் பின்னர் வேட்பு மனு படிவங்களை அம்மன் பாதங்களில் வைத்து பூஜைகள் செய்து பெற்றுக்கொண் டார்.
பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடுவதற்கு வருகிற 2-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறேன். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 4 மாத கால ஆட்சியில் பல நல்ல திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளோம். தேர்தல் பிரசாரத்திற்கு வருமாறு தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை அழைத்துள்ளோம். அவரும் வருவதாக கூறியுள்ளார்.
காவிரி பிரச்சனையில் கர்நாடகாவிற்கு ஆதரவாகத் தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் உரிமையை விட்டுகொடுக்க முடியாது.
நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஜான் குமாரை நிர்பந்தப்படுத்தி ராஜினாமா செய்ய சொன்னதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் கிடையாது. ஜான் குமார் தற்போதும் எனது வெற்றிக்காக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
புதுச்சேரி மாநில எதிர்க்கட்சியான அ.தி.மு.க., சபாநாயகர் சட்டசபை குழுக்களை அமைக்க முன்வரவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால் புதுச்சேரி மாநில சபாநாயகரிடம் ஏற்கனவே அரசு சார்பில் சட்டசபை குழுக்களை அமைப்பதற்கான பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அது தாமதமாகிறது. விரைவில் சட்டசபை குழுக்களை சபா நாயகர் அறிவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுனருக்கும், புதுச் சேரி அரசிற்கும் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






