என் மலர்
செய்திகள்

குறிப்பிட்ட காலத்துக்குள் பொங்கல் இலவச வேட்டி- சேலை தயாரிக்க வேண்டும்: கைத்தறி துறை அமைச்சர் வலியுறுத்தல்
குறிப்பிட்ட காலத்துக்குள் பொங்கல் இலவச வேட்டி- சேலை தயாரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கைத்தறி துறை அமைச்சர் மணியன் கூறினார்.
ஈரோடு:
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்கி வருகிறது.
இதே போல் 2017-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி- சேலை வழங்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஆய்வு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். அரசு கைத்தறிதுறை முதன்மை செயலாளர் அர்மந்தர்சிங், இயக்குனர் முனியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கைத்தறி துறை அமைச்சர் மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச வேட்டி- சேலை வழங்கி வருகிறது. அது தரமானதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் பண்டிகைக்குள் தரமான வேட்டி- சேலை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வேட்டி- சேலைகள் தரமானதாக இருப்பதோடு அளவும் குறையாமலும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் மணியன் கூறினார்.
ஆய்வு கூட்டத்தில் செல்வ குமார சின்னையன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தோப்பு வெங்கடாச்சலம், கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்பிரணி, ஈரோடு மாவட்ட கைத்தறி துறை உதவி இயக்குனர் பிச்சமுத்து மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்கி வருகிறது.
இதே போல் 2017-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி- சேலை வழங்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஆய்வு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். அரசு கைத்தறிதுறை முதன்மை செயலாளர் அர்மந்தர்சிங், இயக்குனர் முனியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கைத்தறி துறை அமைச்சர் மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச வேட்டி- சேலை வழங்கி வருகிறது. அது தரமானதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் பண்டிகைக்குள் தரமான வேட்டி- சேலை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வேட்டி- சேலைகள் தரமானதாக இருப்பதோடு அளவும் குறையாமலும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் மணியன் கூறினார்.
ஆய்வு கூட்டத்தில் செல்வ குமார சின்னையன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தோப்பு வெங்கடாச்சலம், கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்பிரணி, ஈரோடு மாவட்ட கைத்தறி துறை உதவி இயக்குனர் பிச்சமுத்து மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






