என் மலர்
செய்திகள்

புதுச்சேரியில் இருந்து கடத்தல்: ரூ.7 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள்-துப்பாக்கி பறிமுதல்
காரைக்குடி அருகே வாகன சோதனையில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள்-துப்பாக்கியுடன் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரைக்குடி:
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஒரு கும்பல் மது பாட்டில்களை வாங்கி வந்து தமிழகத்தில் போலி முத்திரைகளை ஒட்டி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
புதுச்சேரியில் இருந்து தமிழகம் வரும் எல்லை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. காரைக்குடி போலீஸ் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேகமாக ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். காரில் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் அவர்களை கீழே இறக்கிவிட்டு விட்டு காரை சோதனை செய்தனர். அப்போது காரில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. 4 ஆயிரம் குவார்ட்டர் பாட்டில்கள், 35 முழு பாட்டில்கள் காரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தமிழக முத்திரையுடன் போலி ஸ்டிக்கர்களும், ஒரு நாட்டு துப்பாக்கியும் காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து காரில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த தாஸ் என்ற ஆரோக்கியதாஸ் (வயது46), ராஜாமோகன் (34), கீரனூர் மாரியப்பன் மனைவி இலக்கியா (24), காரைக்குடி சண்முகம் மனைவி பொன்னுமணி (37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி தமிழகம் கடத்தி வரும் இவர்கள் இங்கு வைத்து போலி முத்திரைகளை ஒட்டி விற்பனை செய்து வந்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் போலி ஸ்டிக்கர்களின் மொத்த மதிப்பு ரூ. 7 லட்சம் ஆகும். இந்த போலி முத்திரை மது விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஒரு கும்பல் மது பாட்டில்களை வாங்கி வந்து தமிழகத்தில் போலி முத்திரைகளை ஒட்டி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
புதுச்சேரியில் இருந்து தமிழகம் வரும் எல்லை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. காரைக்குடி போலீஸ் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேகமாக ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். காரில் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் அவர்களை கீழே இறக்கிவிட்டு விட்டு காரை சோதனை செய்தனர். அப்போது காரில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. 4 ஆயிரம் குவார்ட்டர் பாட்டில்கள், 35 முழு பாட்டில்கள் காரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தமிழக முத்திரையுடன் போலி ஸ்டிக்கர்களும், ஒரு நாட்டு துப்பாக்கியும் காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து காரில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த தாஸ் என்ற ஆரோக்கியதாஸ் (வயது46), ராஜாமோகன் (34), கீரனூர் மாரியப்பன் மனைவி இலக்கியா (24), காரைக்குடி சண்முகம் மனைவி பொன்னுமணி (37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி தமிழகம் கடத்தி வரும் இவர்கள் இங்கு வைத்து போலி முத்திரைகளை ஒட்டி விற்பனை செய்து வந்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் போலி ஸ்டிக்கர்களின் மொத்த மதிப்பு ரூ. 7 லட்சம் ஆகும். இந்த போலி முத்திரை மது விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






