என் மலர்
செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு - பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதியில் பயணிகள் அலறி அடித்து ஓடினர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் புறப்பாடு பகுதி பார்வையாளர் 3-வது நுழைவு வாயில் அருகே நேற்று மாலை அட்டை பெட்டி ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது. இதை கண்ட மத்திய தொழிற்படை போலீசார், அந்த பெட்டி யாருடையது? என்று விசாரித்தனர். ஆனால் அதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முன்வரவில்லை.
இதனால் மர்ம அட்டை பெட்டியில் வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது. உடனடியாக மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர். அட்டை பெட்டியை சுற்றிலும் யாரும் செல்லாதபடி தடுப்பு அமைக்கப்பட்டது.
இதை கண்டு விமான நிலையத்துக்கு வந்த பயணிகளும், பார்வையாளர் பகுதிக்கு வந்தவர்களும் அலறி அடித்து ஓடினார்கள். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த மர்ம பெட்டியை சோதனை செய்தபோது அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அதன்பிறகே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
பின்னர் அந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ரெட்டி தயாரிக்கும் கருவி இருந்தது. பயணிகள் யாராவது அந்த பெட்டியை மறந்து போய் தவற விட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து அந்த அட்டை பெட்டி, விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் நேற்று முன்தினம் இரவும் இதே இடத்தில் மர்ம பை ஒன்று கிடந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் அதை சோதனை செய்தபோது அதில் துணிகள் இருப்பது தெரிந்தது. பின்னர் அந்த பை விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது பார்வையாளர்கள் பகுதியில் இருந்து நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த யாசிர் என்பவர் ஓடி வந்து, “அந்த பை என்னுடையது. மகன் வெளிநாடு சென்றதால் வழி அனுப்ப வந்தேன். பார்வையாளர் பகுதியில் பையை எடுத்துச்செல்ல அனுமதி மறுத்ததால் வெளியே வைத்து விட்டு சென்றேன்” என்று கூறினார். இதையடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அந்த பை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் புறப்பாடு பகுதி பார்வையாளர் 3-வது நுழைவு வாயில் அருகே நேற்று மாலை அட்டை பெட்டி ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது. இதை கண்ட மத்திய தொழிற்படை போலீசார், அந்த பெட்டி யாருடையது? என்று விசாரித்தனர். ஆனால் அதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முன்வரவில்லை.
இதனால் மர்ம அட்டை பெட்டியில் வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது. உடனடியாக மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர். அட்டை பெட்டியை சுற்றிலும் யாரும் செல்லாதபடி தடுப்பு அமைக்கப்பட்டது.
இதை கண்டு விமான நிலையத்துக்கு வந்த பயணிகளும், பார்வையாளர் பகுதிக்கு வந்தவர்களும் அலறி அடித்து ஓடினார்கள். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த மர்ம பெட்டியை சோதனை செய்தபோது அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அதன்பிறகே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
பின்னர் அந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ரெட்டி தயாரிக்கும் கருவி இருந்தது. பயணிகள் யாராவது அந்த பெட்டியை மறந்து போய் தவற விட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து அந்த அட்டை பெட்டி, விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் நேற்று முன்தினம் இரவும் இதே இடத்தில் மர்ம பை ஒன்று கிடந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் அதை சோதனை செய்தபோது அதில் துணிகள் இருப்பது தெரிந்தது. பின்னர் அந்த பை விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது பார்வையாளர்கள் பகுதியில் இருந்து நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த யாசிர் என்பவர் ஓடி வந்து, “அந்த பை என்னுடையது. மகன் வெளிநாடு சென்றதால் வழி அனுப்ப வந்தேன். பார்வையாளர் பகுதியில் பையை எடுத்துச்செல்ல அனுமதி மறுத்ததால் வெளியே வைத்து விட்டு சென்றேன்” என்று கூறினார். இதையடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அந்த பை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story






