search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க சங்கிலியை பறிகொடுத்த அரசமதி
    X
    தங்க சங்கிலியை பறிகொடுத்த அரசமதி

    விருத்தாசலம் அருகே கணவனை கத்தியால் தாக்கி மனைவியின் தங்க சங்கிலி பறிப்பு: கொள்ளையர்கள் அட்டகாசம்

    விருத்தாசலம் அருகே கணவனை கத்தியால் தாக்கி மனைவியின் தங்க சங்கிலியை பறித்த கொள்ளையர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள கோட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 46). விவசாயி. இவரது மனைவி அரசமதி (40). இருவரும் நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் விருத்தாசலம் வந்து காய்கறி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

    கானாதுகண்டான் அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து உதைத்து தள்ளி விட்டனர். இதனை எதிர்பாராத ஆறுமுகமும், அரசமதியும் கீழே விழுந்தனர்.

    அப்போது அவர்கள் 3 பேரும் அரசமதியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை ஆறுமுகம் பிடிக்க முயன்றார். அவரை கத்தியால் குத்தினர். இதில் அவர் காயமடைந்தார். பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    உடன் தனது செல்போன் மூலம் கண்டியங்குப்பம் மற்றும் கோட்டேரியில் உள்ள தனது நண்பர்களுக்கு ஆறுமுகம் தகவல் கொடுத்தார். இதனால் கண்டியாங்குப்பம் கிராம மக்கள் திரண்டு வந்து விருத்தாசலம்- காட்டுக்கூடலூர் சாலையை மறித்து நின்றனர். அப்போது மோட் டார் சைக்கிளில் வந்த 3 பேரையும் பொதுமக்கள் பிடிக்க முயன்றனர்.

    அவர்கள் 3 பேரும் மோட்டார்சைக்கிளை போட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர்.

    ஆத்திரமடைந்த மக்கள் அவர்களை விரட்டிச் சென்று பிடித்து தர்ம அடிகொடுத்தனர். பிடித்த 3 பேரையும் விருத்தாசலம் போலீசாரிடம் பொது மக்கள் ஒப்படைத்தனர்.

    போலீசார் அவர்களை விருத்தாசலம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அரியலூர் மாவட்டம் இடையக்குறிச்சியை சேர்ந்த சதீஷ்குமார், சேத்தியாதோப்பு அள்ளூர் பகுதியை சேர்ந்த ஜெகன், காட்டுமன்னார்கோவில் மலைமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்று தெரிய வந்தது. இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கோட்டேரி மற்றும் பெரியகண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த மக்கள் விருத்தாசலம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஆறுமுகம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    Next Story
    ×