என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சீர்காழி அருகே பெண்ணை கொன்று நகை கொள்ளை
Byமாலை மலர்20 Sept 2016 9:16 AM IST (Updated: 20 Sept 2016 9:16 AM IST)
கொள்ளிடம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்டது.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் தாண்டவன் குளத்தை சேர்ந்தவர் அகோர மூர்த்தி. இவரது மனைவி சீத்தா (35). இவர்களுக்கு குழந்தை இல்லை.
அகோர மூர்த்தி கேரள மாநிலம் கொச்சி துறை முகத்தில் படகு கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதனால் சீத்தா தனியாக வசித்து வந்தார்.
கடந்த 20 நாட்களுக்கு முன் அகோர மூர்த்தி சொந்த ஊருக்கு வந்து சென்றார். இந்த நிலையில் நேற்று சீத்தாவின் வீடு நீண்ட நேரமாக பூட்டப்பட்டு இருந்தது.
அக்கம் பக்கத்தினர் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தனர். அப்போது பின் பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது சீத்தா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. அவர் அணிந்திருந்த 5¼ பவுன் நகையை காணவில்லை. அவரை கொள்ளை கும்பல் கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து புதுப்பட்டினம் போலீசுக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
சீத்தாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை குறித்து சீத்தாவின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் வந்த பின்னர் தான் வீட்டில் வேறு பொருட்களை கொள்ளை போனதா? என்பது தெரிய வரும். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் தாண்டவன் குளத்தை சேர்ந்தவர் அகோர மூர்த்தி. இவரது மனைவி சீத்தா (35). இவர்களுக்கு குழந்தை இல்லை.
அகோர மூர்த்தி கேரள மாநிலம் கொச்சி துறை முகத்தில் படகு கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதனால் சீத்தா தனியாக வசித்து வந்தார்.
கடந்த 20 நாட்களுக்கு முன் அகோர மூர்த்தி சொந்த ஊருக்கு வந்து சென்றார். இந்த நிலையில் நேற்று சீத்தாவின் வீடு நீண்ட நேரமாக பூட்டப்பட்டு இருந்தது.
அக்கம் பக்கத்தினர் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தனர். அப்போது பின் பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது சீத்தா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. அவர் அணிந்திருந்த 5¼ பவுன் நகையை காணவில்லை. அவரை கொள்ளை கும்பல் கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து புதுப்பட்டினம் போலீசுக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
சீத்தாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை குறித்து சீத்தாவின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் வந்த பின்னர் தான் வீட்டில் வேறு பொருட்களை கொள்ளை போனதா? என்பது தெரிய வரும். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X