என் மலர்
செய்திகள்

தாளவாடி பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கர்நாடகா மாநில தனியார் பஸ்களை படத்தில் காணலாம்.
சாம்ராஜ் நகருக்கு சித்தராமையா வருகை: புளிஞ்சூர் எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு மாவட்ட எல்லை பகுதியில் உள்ள கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகருக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா இன்று மாலை நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இதையொட்டி சாம்ராஜ் நகரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்:
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, கர்நாடகத்தில் பதற்றம் நிலவுவதால் தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் 14-வது நாளாக நிறுத்துப்பட்டுள்ளன.
கடந்த 12-ம் தேதி கர்நாடகத்தில் நடந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதால் கர்நாடக அரசு பஸ்களும் தமிழகத்தில் இயக்குவதை 6-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களிடையே முற்றிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசு பஸ்கள் இரு மாநில எல்லையான புளிஞ்சூர் வரையில் இயக்கப்படுகிறது.
ஆனால் தமிழக பஸ்கள் எல்லை வரை இயக்கப்படாததால் கர்நாடக பயணிகள் தனியார்,வாடகை வேன்களில் தமிழகம் வரத்தொடங்கினர்.
கர்நாடகத்தின் சாம்ராஜ் நகரில் இருந்து அம்மாநில அரசு பஸ்கள் தமிழக எல்லையில் அமைந்துள்ள தாளவாடிக்கு 3 நாட்களாக இயக்கப்படுகிறது. இதனால் தமிழக பயணிகள் தாளவாடி வரும் கர்நாடக அரசு பஸ்களில் ஏறி சாம்ராஜ்நகர் வழியாக கர்நாடகத்தின் பிற இடங்களுக்கு செல்கின்றனர்.
கர்நாடக பதிவெண் கொண்ட தனியார் பஸ்களும் இரு மாநிலங்களிடையே வந்து செல்கின்றன. கர்நாடகத்தில் விளையும் காய் கறிகளை தமிழக எல்லை வரை கொண்டு வந்து வேறு லாரிகளில் ஏற்றிக்கொண்டு பிற இடங்களுக்கு செல்கின்றனர். தமிழக அரசு பஸ்கள் கர்நாடக எல்லையில் நுழையாமல் தலமலை வழியாக தாளவாடி செல்கின்றன.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட எல்லை பகுதியில் உள்ள கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகருக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா இன்று மாலை நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
இதையொட்டி சாம்ராஜ் நகரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தமிழக- கர்நாடகா எல்லை பகுதியான புளிஞ்சூர் சோதனை சாவடியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, கர்நாடகத்தில் பதற்றம் நிலவுவதால் தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் 14-வது நாளாக நிறுத்துப்பட்டுள்ளன.
கடந்த 12-ம் தேதி கர்நாடகத்தில் நடந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதால் கர்நாடக அரசு பஸ்களும் தமிழகத்தில் இயக்குவதை 6-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களிடையே முற்றிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசு பஸ்கள் இரு மாநில எல்லையான புளிஞ்சூர் வரையில் இயக்கப்படுகிறது.
ஆனால் தமிழக பஸ்கள் எல்லை வரை இயக்கப்படாததால் கர்நாடக பயணிகள் தனியார்,வாடகை வேன்களில் தமிழகம் வரத்தொடங்கினர்.
கர்நாடகத்தின் சாம்ராஜ் நகரில் இருந்து அம்மாநில அரசு பஸ்கள் தமிழக எல்லையில் அமைந்துள்ள தாளவாடிக்கு 3 நாட்களாக இயக்கப்படுகிறது. இதனால் தமிழக பயணிகள் தாளவாடி வரும் கர்நாடக அரசு பஸ்களில் ஏறி சாம்ராஜ்நகர் வழியாக கர்நாடகத்தின் பிற இடங்களுக்கு செல்கின்றனர்.
கர்நாடக பதிவெண் கொண்ட தனியார் பஸ்களும் இரு மாநிலங்களிடையே வந்து செல்கின்றன. கர்நாடகத்தில் விளையும் காய் கறிகளை தமிழக எல்லை வரை கொண்டு வந்து வேறு லாரிகளில் ஏற்றிக்கொண்டு பிற இடங்களுக்கு செல்கின்றனர். தமிழக அரசு பஸ்கள் கர்நாடக எல்லையில் நுழையாமல் தலமலை வழியாக தாளவாடி செல்கின்றன.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட எல்லை பகுதியில் உள்ள கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகருக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா இன்று மாலை நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.
இதையொட்டி சாம்ராஜ் நகரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தமிழக- கர்நாடகா எல்லை பகுதியான புளிஞ்சூர் சோதனை சாவடியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story






